காலில் விழுந்தும் தன்ஷிகாவை அசிங்கப்படுத்திய டிஆர்; விழித்திரு குழுவுக்கு விஷால் கண்டனம்

காலில் விழுந்தும் தன்ஷிகாவை அசிங்கப்படுத்திய டிஆர்; விழித்திரு குழுவுக்கு விஷால் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal actionமீரா கதிரவன் இயக்கியுள்ள விழித்திரு படத்தில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது தன்ஷிகா பேசும்போது டிராஜேந்தர் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை.

இதனால் ஆவேசமடைந்த டிஆர். இறுதியாக பேசும்போது தன்ஷிகா அழும் அளவுக்கு தன் அடுக்குமொழியால் திட்டினார்.

அவர் காலில் விழுந்தும் நீ கட்டல சாரி. இப்போ சொல்ற சாரி எனவும் பேசினார்.

இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர்.

அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.

விஷால்
தலைவர் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
பொதுசெயலாளர் – தென்னிந்திய நடிகர் சங்கம்

Vishal condemn T Rajendar for insulting Dhanshika at Vizhithiru Press Meet

vizhithiru tr dhansika

 

அட்லி இயக்கத்தில் பாட்ஷா 2; சூப்பர்ஸ்டார் ரியாக்சன் என்ன.?

அட்லி இயக்கத்தில் பாட்ஷா 2; சூப்பர்ஸ்டார் ரியாக்சன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlee wish to direct Baasha 2 with SuperStar Rajinikanthசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் சினிமா கேரியரில் 160 படங்களை கடந்துவிட்டாலும் அவராலும் அவரது ரசிகர்களாலும் மறக்கமுடியாத படம் பாட்ஷா.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய இப்படத்திற்கு தேவா இசையமைக்க, ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.

இது ரிலீஸ் ஆகி 22 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்றும் ஆயுதபூஜைக்கு இப்படத்தில் உள்ள ஆட்டோக்காரன் பாடலை கேட்க முடிகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் அட்லி கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது…

நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது கிட்டதட்ட ஒரு வருடம் எந்திரன் சூட்டிங்கில் ரஜினி சாருடன் இருந்தேன்.

இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அன்பாக பழகினோம்.

நான் அவர் படத்தை இயக்கினால் பாட்ஷா 2 படத்தை இயக்க ஆசையாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Atlee wish to direct Baasha 2 with SuperStar Rajinikanth

வந்தேமாதரம் ஸ்டைலில் ஏஆர். ரஹ்மானின் மெர்சல் பாடல்

வந்தேமாதரம் ஸ்டைலில் ஏஆர். ரஹ்மானின் மெர்சல் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alaporan Tamizhan song created based on Vande Matharamவிஜய் நடிப்பில் அட்லி உருவாகியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக உருவாக்கியுள்ளது.

தற்போது இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.

இதில் உள்ள ஆளப்போறான் தமிழன் பாடல் உருவாக என்ன காரணம் என இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.

அதில்… வந்தேமாதரம் போன்ற ஒரு தமிழ் ஆன்தம் பாடல் வேண்டும் என நினைத்தேன். எனவே ஏஆர். ரஹ்மானிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். அவரும் கொடுத்துவிட்டார்” என்றார்.

Alaporan Tamizhan song created based on Vande Matharam

பிரபு-நடிகர் சங்கம் வருத்தம் எதிரொலி; சிவாஜி மணிமண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார்

பிரபு-நடிகர் சங்கம் வருத்தம் எதிரொலி; சிவாஜி மணிமண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Deputy CM Panneer Selvam will inaugurate Sivaji Manimandapamநடிகர் திலகம் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் செவாலியே சிவாஜி கணேசன்.

இவரது மணிமண்டபம் இவரது பிறந்தநாளில் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார் என்று தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது.

தமிழக முதல்வர் இங்கே இருக்கும்போது, அவர் இந்த விழாவில் அவர் கலந்துக் கொள்ளாதது வருத்தமளிப்பதாக பிரபு தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இதே வேண்டுகோளை வலியுறுத்தி தமிழக முதல் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை நடிகர் சங்க நிர்வாகிகள் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளார்.

அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‘‘நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின்படியும், கலைத் துறையினரின் கோரிக்கைகளின்படியும் 1.10.17 அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மணிமண்டபத்தை தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைப்பார்கள்.

மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகிக்கவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்ரபரத்துறை அமைச்சர் திரு. கம்டபூர் ராஜு அவர்கள் முன்னிலை வகிப்பார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.

விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Deputy CM Panneer Selvam will inaugurate Sivaji Manimandapam

சிவாஜி மணிமண்டபத்தை முதல்வர் திறக்க பிரபு-குஷ்பூ வேண்டுகோள்

சிவாஜி மணிமண்டபத்தை முதல்வர் திறக்க பிரபு-குஷ்பூ வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kushboo and prabuசென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைப்பார்கள் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைப்பது ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்றும் அவர் உயிருடன் இருந்திருந்தால், திறப்பு விழாவிற்கு நேரில் வந்து திறந்து வைத்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

மணி மண்டபம் கட்டியது மகிழ்ச்சி அளித்தாலும், அதனை முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ திறக்க முன்வராதது, தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்காக சிவாஜி பாடுபட்டிருக்கிறார் என தெரிவித்துள்ள பிரபு, முதலமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் வரும் என தனது குடும்பத்தினரும், சிவாஜி கணேசனின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றும் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை குஷ்புவும் தன் கருத்தை கூறியுள்ளார்.

அதில்… ‘சிவாஜி கணேசனை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது.

முதல்வர்,  துணை முதல்வர், தமிழக அரசுக்கு மேதைகளை மதிக்கத் தெரியவில்லை.  அதிகாரத்தை  கையில் வைத்துக் கொண்டிருப்பதால் சிவாஜியை அவமரியாதை செய்ய  வேண்டாம்’ என்றார்.

Sivaji Manimandapam should be opened by CM Edappadi says Prabu Kushboo

 

மாரி 2 படத்திற்காக மலர் டீச்சரை மடக்கிய தனுஷ்

மாரி 2 படத்திற்காக மலர் டீச்சரை மடக்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sai pallaviபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், நடித்த மாரி படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளதால், ஒவ்வொரு கலைஞர்களையும் அறிவித்து வருகின்றனர்.

இரண்டாம் பாகத்தில் தனுஷ்க்கு வில்னாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது.

தற்போது அதை அறிவித்துவுள்ளனர்.

பிரேமம் புகழ் மலர் டீச்சர்தான் அவர். ஆம் சாய்பல்லவி தான் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று இயக்குனரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி சமீபத்தில் நடித்த தெலுங்கு படமான பிதா ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதில் தெலுங்கில் சொந்தக்குரலில் சாய்பல்லவியே பேசி நடித்திருந்ததால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Balaji Mohan‏Verified account @directormbalaji

The vibrant @Sai_Pallavi92 is the #HeroineofMaari2Its a character thats right at the heart of the story of #Maari2 #SaiPallavi #Bilingual

sai pallavi maari 2 heroine

More Articles
Follows