‘காதல் எங்கே? ஏழு ஆண்டு உறவு முறிவு’ – வரலட்சுமி பாய்ச்சல்

‘காதல் எங்கே? ஏழு ஆண்டு உறவு முறிவு’ – வரலட்சுமி பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and varalaxmiசினிமா உலகில் காதல், திருமணம் மற்றும் விவாகரத்து அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான்.

இதில் நீண்ட நாட்களாக பேசப்பட்டது விஷால்-வரலட்சுமியின் காதல்தான்.

இவர்கள் இருவரும் காதலை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.

ஆனால் நல்ல நட்பு உள்ளது என்று பலமுறை தெரிவித்துள்ளனர்.

ராதிகா சரத்குமாரின் மகளின் திருமண விழாவில் கூட கலந்து கொள்ளாத வரலட்சுமி, விஷாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் காதலை போட்டு உடைத்துள்ளார் வரலட்சுமி.

“ஏழு ஆண்டுகளாக இருந்த எங்களுடைய காதல் உறவை உடைத்து விட்டார்.

அச்செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார்.

உலகம் எங்கே போகிறது; காதல் எங்கே? என பாய்ந்துள்ளார் வரலட்சுமி.

அவர் யாரை குறிப்பிட்டு சொல்லியுள்ளார் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.

 

பின்குறிப்பு:  அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, நான் என் வேலையை பற்றியே குறிப்பிட்டேன். அது என்னை பற்றியது இல்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குரு பாக்யராஜுக்கு பார்த்திபன் செய்யும் நன்றி கடன்

குரு பாக்யராஜுக்கு பார்த்திபன் செய்யும் நன்றி கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bhagyaraj parthibanஇயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என மாறி மாறி உருவெடுக்கும் பார்த்திபன் அடுத்து, இயக்குனராக இருக்கிறார்.

அதற்கான அறிவிப்பையும் முன்பே தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை அறிவித்துவிட்டு கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது தனது குரு கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவை இப்படத்திற்கு நாயகனாக்கி இருக்கிறார்.

நாயகியாக ‘என்னை அறிந்தால்’ மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்த, பார்வதி நாயர் நடிக்கிறார்.

பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு போராடி வரும் சாந்தனுவுக்கு உதவிட அவரை தேர்ந்தெடுத்தேன் என்றும், இது தனது குரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு தான் செய்யும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு ப்ரெண்ட்டு கிடைச்சிட்டாரு; அப்பா-அம்மாதான் கிடைக்கல!

உதயநிதிக்கு ப்ரெண்ட்டு கிடைச்சிட்டாரு; அப்பா-அம்மாதான் கிடைக்கல!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanithசிகரம் தொடு படத்தை தொடர்ந்து கௌரவ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆர். கே. சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்க, தற்போது சூரியும் இணைந்துள்ளார்.

உதயநிதிக்கு பெற்றோர் நடிக்கதான் இன்னும் ஆள்கள் கிடைக்கலையாம். அதற்கான தேர்வு தற்போது நடைபெறுகிறதாம்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அக். 10ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக ரூ. 60 லட்சத்தில் செட் ஒன்று போடப்பட்டு வருகிறது.

‘என் வாழ்க்கைக்கு சப்போர்ட்டே அவர்தான்..’ – சிவகார்த்திகேயன்

‘என் வாழ்க்கைக்கு சப்போர்ட்டே அவர்தான்..’ – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

யூடியுப் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இது 5 மில்லியனை தொடவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த தன் சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது….

படத்திற்கு அனிருத் மிகப்பெரிய பலம். அவருக்கு திருப்தி வராதவரை பாடல்களை டெலிவரி செய்ய மாட்டார்.

செஞ்சிட்டாளே பாடலை அவர் கம்போஸிங் செய்து 2 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

எங்கள் படத்திற்கு பயன்படுத்தி கொண்டார்.

எனக்கு என்று வரும்போது தன்னுடைய எக்ஸ்ட்ரா உழைப்பை கொடுப்பேன் என்று அனிருத்தே சொன்னார்.

அனிருத் என் ப்ரெண்ட், சகோதரர் போன்றவர். என்னுடைய படத்திற்கு மட்டுமில்லை என் வாழ்க்கைக்கு சர்போர்ட்டே அவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த ‘ரெமோ’

தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த ‘ரெமோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyan keerthy sureshசிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவரை இல்லாத எதிர்பாரப்பு ரெமோ படத்திற்கு எழுந்துள்ளது.

இப்படம் நேற்று சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உலகம் முழுவதும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆனால் தற்போதே சென்னையிலுள்ள அபிராமி திரையரங்கில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள நகோயா (Nagoya) என்ற பகுதியில் இப்படம் வெளியாகிறதாம்.

ஞாயிற்றுக்கிழமை (அக் 9ஆம் தேதி) இங்குள்ள New Minato Aeon Mall என்ற திரையரங்கில் இப்படம் திரையிடப்படுகிறதாம்.

அதற்கு 2000 ஜப்பான் யென்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எந்த ஒரு தமிழ்படமும் இங்கு வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளது ‘ரெமோ’

கபாலி ‘மைம் கோபி’யின் ‘ஆகாய’ மனசு

கபாலி ‘மைம் கோபி’யின் ‘ஆகாய’ மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mme gopiமாயா, மெட்ராஸ், கதகளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மைம் கோபி.

கபாலியில் இளமை தோற்றத்திலும் முதுமை தோற்றத்தில் நடித்திருந்தார்.

இவர் ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

அதில் உள்ள குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு 20 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பறந்துள்ளார்.

அவர்களை ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து, ஊட்டிக்கு சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி மைம்கோபி கூறுகையில்…

“ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப் பயணம் என்பது ஒரு கனவுபோல. அதை நனவாக்கும் ஆசையில் இந்த முயற்சியை ஆரம்பித்து இருக்கிறோம்.

எனவே, அவர்களுக்கு உயர்தரமான ஆடைகள் அணிவித்து காஸ்ட்லியான கார்களில் அழைத்து சென்று சென்று மகிழ்விக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறியுள்ளது.

தற்போது அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியான உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் எனது மைம்டு ஸ்டுடியோ நிர்வாகிகள், நண்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Actor Mime Gopi take 20 poor childrens in flight journey

 

More Articles
Follows