பத்மவிபூஷண் இளையராஜாவை காதல் வரிகளால் வாழ்த்திய வைரமுத்து

பத்மவிபூஷண் இளையராஜாவை காதல் வரிகளால் வாழ்த்திய வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu wishes for Badmavibhusan Ilayarajaபல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

அதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பதிவிட்டுள்ளதாவது…

வைரமுத்து‏ @vairamuthu
பத்ம விருதுகள் பெறும்
85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் – உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் – உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்”
– என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.

Vairamuthu wishes for Badmavibhusan Ilayaraja

ரஜினி கட்சியில் ஒரே நாளில் 2 லட்சம் பெண்கள்; விவசாயிகளுக்கும் முக்கியத்துவம்

ரஜினி கட்சியில் ஒரே நாளில் 2 லட்சம் பெண்கள்; விவசாயிகளுக்கும் முக்கியத்துவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு விருந்தாக தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

இதனையொட்டி முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உத்தரவிட்டார்.

மேலும் இணையதளம், செல்போன் செயலி ஆகியவை மூலம் தன் புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் ரஜினிகாந்த்.

முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற தலைவராக சோழிங்கர் என்.ரவி நியமிக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மற்ற மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கியமாக விவசாயிகள் மற்றும் பெண்களை அதிகளவு சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

ரஜினியின் புதிய கட்சியில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மக்கள் மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனையடுத்து மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாயிகள் அணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதில் மகளிர் அணியில் சேர ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி கையால் விருது பெற்று மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

ஸ்ரீதேவி கையால் விருது பெற்று மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Sridevi1970 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் பல படங்களில் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் ஜோடியாக நடித்த பெரும்பாலான படங்கள் வசூலை அள்ளியது.

தமிழகத்தில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் இந்தி படங்களில் நடித்தார்.

அங்கும் புகழ் கொடி நாட்ட நடிகர் அனில்கபூரின் சகோதரரும், தயாரிப்பாளருமான போனி கபூரை மணந்து மும்பையிலேயே செட்டிலானார்.

இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் சந்தித்து கொண்டனர்.

அங்கு கமல்ஹாசனுக்கு ஸ்ரீதேவி கையால் விருது வழங்கப்பட்டது.

அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன்பின்னர் கமல் பேசும்போது, “ஸ்ரீதேவி கையால் விருது பெற்றது மகிழ்ச்சி. அவரை பார்த்ததும் நான் பழைய மலரும் நினைவுகளுக்குள் சென்றேன்” என்றார்.

இதனைக் கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

விஜய்சேதுபதியின் ஒரே படத்திற்கு இளையராஜா குடும்பமே இசையமைக்கிறது

விஜய்சேதுபதியின் ஒரே படத்திற்கு இளையராஜா குடும்பமே இசையமைக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DUdQzjiVQAAWXK0ஒரு சில இயக்குனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நடிகருடன் கூட்டணி அமைத்தால் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்ற சென்டிமெண்ட் உண்டு.

அந்த ராசி சென்டிமெண்டில் வெற்றிக்கரமாக பயணித்து வருபவர்கள் என்றால் சீனுராமசாமி மற்றும் விஜய்சேதுபதியை சொல்லலாம்.

இவர்கள் முதலில் இணைந்த `தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனுராமசாமி.

சில பிரச்சனைகளால் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இதன்பின்னர் விஜய்சேதுபதி-தமன்னாவை வைத்து தர்மதுரை படத்தை இயக்கினார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது ‘மாமனிதன்’ என்ற படத்திற்காக இவர்கள் இணைந்திருக்கின்றனர்.

தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

இத்தகவலை யுவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்; காாி துப்பி கிழித்த கஸ்தூாி

இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்; காாி துப்பி கிழித்த கஸ்தூாி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraja and kasthuriஇசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின.

ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் Indian Express இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

நடிகை கஸ்தூாி அந்த நாளிதழை காாி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஸ்தூாியின் இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகா்கள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.

சத்ரு பட மோசன் போஸ்டரை கௌதம்மேனன் வெளியிட்டார்

சத்ரு பட மோசன் போஸ்டரை கௌதம்மேனன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathru posterஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு.

இந்த படத்தின் நாயகனாக கதிர் நடிக்க நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்.

இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி

Kathirs Sathru motion poster launched by Gautam Vasudev Menon

More Articles
Follows