தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி வருவது அடிக்கடி நடந்து வரும் ஒன்றுதான்.
ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள பலர் முன் வந்தாலும் சில அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக ஹிந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை தங்கள் சுயலாபதிற்காக ஹிந்தி படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹிந்தி மொழியின் ஆதிக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…
“எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லை
தமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?
அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்
புலியைத்
தொட்டாலும் தொடுக
மொழியைத்
தொடாது விடுக
#HindiImposition
என பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.