காதலர் தினத்தில் வைரமுத்துவின் காதல் பாடல்

காதலர் தினத்தில் வைரமுத்துவின் காதல் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthuகாதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.

இதோ அந்தக் காதல் பாட்டு :

மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்
திருவுடல் எரியுண்டதே

ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்

காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்

*

பூக்கள் ஒன்றுதிரண்டு
படைகூட்டி வருவதுபோல்
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே

என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?

தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி

*

பண்ணும் தொல்லைகளெல்லாம்
துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே

திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே

மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே

சாமி கண்ண குத்துமுன்னா பிரதமர்-முதல்வரல்லாம் குருடனாக இருப்பாங்க.. ராஜேஷ் கண்ணா பேச்சு

சாமி கண்ண குத்துமுன்னா பிரதமர்-முதல்வரல்லாம் குருடனாக இருப்பாங்க.. ராஜேஷ் கண்ணா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maayanசாமி கண்ண குத்துமுன்னா பிரதமர்-முதல்வரல்லாம் குருடனாக இருப்பாங்க.. : ராஜேஷ் கண்ணா பேச்சு சாமி கண்ண குத்தும் மாயன், மாயன் ராஜேஷ் கண்ணா, மாயன் படம், மாயன் சிவன் படம், கடவுள் படம் மாயன், மாயன் கிராபிக்ஸ் ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், பின்னணியிசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எஃப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப் , யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில்…, “எங்கள்நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI)என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்த தருணத்தில் இந்த படத்தின்இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரை பார்த்தவுடன் பிடித்தவிட்டது.

அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்த படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில்,“இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள்.
மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படத்தில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என்றார். தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில்,“நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர்.
படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை.” என்றார். இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில்,“மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன்.

நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.” என்றார். நடிகர் சௌந்தர் பேசுகையில்…. “நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை.படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன்.போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.” என்றார். படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது.

தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன். இந்த படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும் எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும். நம்முடைய பெருமைகளையும் கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளை விட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும்.
அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா?பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம். அது உண்மையென்றால் பிரதமர், முதல்வர் வரை எல்லாரும் குருடனாகத்தான் இருப்பாங்க. கர்மா என்ற ஒன்றிருக்கிறது. அதனை செயல்வினை என்றும் சொல்லலாம்.நாம் நல்லசெயல்களை செய்தால் கர்மா, செயல்வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய்வினை ஆகிறது.

மனிதர்களில் சமநிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் சொல்லியிருக்கிறோம். முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும் போது வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும். ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்னசெய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும். அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும்.

அதை போல் மனிதர்கள் தற்போது தன்னைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவனுக்கு. இவனையெல்லாம் ஏன் படைத்தோம்?என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாக இருந்திருக்கும்? எப்படியிருந்திருக்கும்? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்? அது தான் இந்த மாயன். மாயன் ஒரு ஃபேண்டசி . மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வது தான் மாயன். சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன்.
அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார். நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

அப்பவே சொன்னோம்ல.. சிம்ரன்-த்ரிஷா இணையும் புதிய பட அறிவிப்பு

அப்பவே சொன்னோம்ல.. சிம்ரன்-த்ரிஷா இணையும் புதிய பட அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran trishaஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்..

“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.

இந்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள், நடிகையர்களின் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.” என்றார்.

இதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா , ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா ’என்ற காமெடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் மற்றும் த்ரிஷா இணையும் படம் தொடர்பாக நாங்கள் சில தினங்களுக்கு முன் பதிவிட்டு இருந்த செய்தி இதோ…

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிம்ரன்-த்ரிஷா

நா முத்துகுமாருக்கு தேசிய விருது நிச்சயம்; பெட்டிக்கடை பாட்டுக்கு பாராட்டு

நா முத்துகுமாருக்கு தேசிய விருது நிச்சயம்; பெட்டிக்கடை பாட்டுக்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

peti kadaiசமுத்திரக்கனி நடிப்பில் லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் “பெட்டிக்கடை”.

இதில் சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார் சமுத்திரக்கனி.

இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.

இவர்களுடன் வர்ஷா பொல்லம்மா, மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்

இந்த படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய

“சுடல மாட சாமிக்கிட்ட

என்ன வேண்டிக்கிட்ட

சொல்லு புள்ள ”

என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை அமரர் நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

படம் வரும் 22ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

ஒளிப்பதிவு – அருள், சீனிவாஸ்

இசை – மரியா மனோகர்

பாடல்கள் – நா.முத்துக்குமார்,சினேகன், இசக்கிகார்வண்ணன் மடத்தமிழ் வேந்தன்

நடனம் – வின்செண்ட் விமல்

ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – முருகன்

தயாரிப்பு மேற்பார்வை – செல்வம்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

Breaking பைரசியால் பைத்தியம் பிடிக்கும் தமிழ் சினிமா; சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் SR பிரபு

Breaking பைரசியால் பைத்தியம் பிடிக்கும் தமிழ் சினிமா; சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

To beat Piracy Suriyas NGK Teaser release plans changedதமிழ் சினிமாவிற்கு ஒரு பக்கம் ஏறுமுகம் என்றாலும் மறு பக்கம் இறங்கு முகம்தான்.

தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களிலும், நாடுகளிலும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால் மற்றொரு புறம் பைரசியால் இறங்கு முகத்தில் உள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்ஜிகே பட டீசர் நேற்று நள்ளிரவே வெளியானது. இதை சூர்யா ரசிகர்கள் பகிரவிட்டாலும் மற்றவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் இன்று மாலை 5 மணிக்கு என்ஜிகே டீசர் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் கேரளா முதல் வெளிநாடுகளிலும் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்திருந்தனர்.
இந்நிலையில் என்ஜிகே பட டீசரை தற்போது காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளதாக படத்தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு அறிவித்துள்ளார்.

மேலும் பைரசியை ஒழிக்க ஒரிஜினல் என்ஜிகே டீசரை வெளியிடுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரித்தி சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

சினிமாவை நேசிக்கும் அனைவரும் பைரசியை தடுப்போம். சினிமாவை நம்பியுள்ள பல குடும்பங்களை வாழ வைக்க உறுதியேற்போம்.

To beat Piracy Suriyas NGK Teaser release plans changed

NGK டீசர் லீக்கானது..; அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய சூர்யா வருகிறார்

NGK டீசர் லீக்கானது..; அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய சூர்யா வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK Teaser Leaked Suriyas Political punchசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்ஜிகே.

இதில் நாயகிகளாக ரகுல் பிரித்தி சிங், சாய் பல்லவி இருவரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் சூட்டிங் சில தடங்களால் நின்றுபோனது. பின்னர் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி தற்போது கோடை விடுமுறைக்கு படம் வருகிறது.

இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போது இணையங்களில் கசிந்துள்ளது.
இதற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த டீசர் 1 நிமிடம் 6 நொடிகள் ஓடக்கூடியது.

இந்த டீசரில் அரசியல் களத்தில் இறங்க சூர்யா ஆயுத்தமாகி வருவதாக தெரிகிறது. இந்த டீசரில் நீங்க இறங்குனா அது சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும் என சாய்பல்லவி சொல்வதாக டயலாக்குகள் உள்ளது.

மேலும் இதில் சூர்யா விவசாயி போல நடிப்பதாகவும் காட்சிகள் உள்ளது. இறுதியாக காத்திருப்போம் என்ற சூர்யா பேசும் வசனத்துடன் முடிகிறது என்ஜிகே டீசர்.

NGK Teaser Leaked Suriyas Political punch

More Articles
Follows