தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
UNICEF யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா.
எனவே இந்த அமைப்பு தொடர்பான விழிப்புணர்வு செயல்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2017ல் திருப்போரூர் அருகே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் வகையில் நடைபெற்ற கழிப்பறை கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தானே செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்
இந்த நிலையில், திரிஷாவின் செயலை மேற்கோள்காட்டி மற்ற நடிகர், நடிகைகளுக்கும் UNICEF அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தன் சமூக வலைத்தள பக்கத்தில் UNICEF அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ஜாப் சக்காரியா பதிவிட்டுள்ளதாவது…
“கிராமங்களில் கழிப்பறையின் அவசியத்தை உணர்த்த திரிஷா, கழிப்பறை கட்டுமானத்தை அவரே தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ரூபாய் கூட நடிகை திரிஷா சம்பளமாக வாங்கவில்லை.
திரிஷாவைப் போன்று குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மற்ற நடிகர், நடிகைகள் முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
UNICEF ceo praises actress Trisha