தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்‘.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க அவரின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கியிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார் சரவணன்.
இவையில்லாமல் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தையும் இயக்கினார்.
இடையில் ஒரு விபத்து காரணமாக ஓய்வில் இருந்துள்ளார். தற்போது முழுமையாக குணம் அடைந்தபின் தற்போது மீண்டும் படங்களை இயக்க வந்துள்ளார்.
இப்படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் முன்னணி நடிகையான த்ரிஷாவை அனுகியுள்ளதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது