ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டது.

இதன் பின்னர் அரசு துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

TN CM important desicion on government employees

பிப்ரவரி 12 முதல் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘இது விபத்து பகுதி’

பிப்ரவரி 12 முதல் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘இது விபத்து பகுதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேகா மூவீஸ் புரொடக்ஷன்ஸின் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவிருக்கும் ஹாரர் திரில்லர் “இது விபத்து பகுதி” படம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் மிரட்ட வருகிறது.

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து” பகுதி ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள். வெளியாகியுள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றை விஜய் திருமூலம் கையாண்டுள்ளார்.

கை தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

எடிட்டிங் பணிகளை ஆண்டோ ராயன், ஸ்டன்ட் மின்னல் முருகன், நடனம் ஜோ மதி மற்றும் கலை சுந்தர் ராஜன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர் திரில்லர் படமாக இருப்பதால் படம் விறுவிறுப்பான கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 12 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

Ithu Vibathu Paguthi from feb 12 in theatres

சிம்பு பர்த் டே & ‘மாநாடு’ அப்டேட்..; சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ ட்ரீட்

சிம்பு பர்த் டே & ‘மாநாடு’ அப்டேட்..; சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu (2)‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தன் பிறந்த நாளுக்கு தான் ஊரில் இருக்க மாட்டேன். ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என சிம்பு அறிக்கை வெளியிட்டார்.

இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த டீசர் அறிவிப்பு உற்சாகத்தை அளிக்கும் என நம்பலாம்.

Str’s Maanaadu teaser date and time is here

எல்ஐசி பங்குகள் விற்பனை.. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன்..; பட்ஜெட் 2021-22 ஒரு பார்வை

எல்ஐசி பங்குகள் விற்பனை.. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன்..; பட்ஜெட் 2021-22 ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Budget 2021 - 20222021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இதோ..:

ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு விடும்.

எல்ஐசி காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 2020-25-ஆம் ஆண்டுவரை ரூ.111 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

இந்த நிதியை உருவாக்குவதற்காக ரூ.20,000 கோடியில் மேம்பாட்டு நிதிக் கழகம் (டிஎப்ஐ) உருவாக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரி 10% இருந்து 15 % வீதமாக அதிகரிப்பு.

75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு.

நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம்.

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைப்பு.

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் என தகவல்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிப்பு.

அதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 கூடுதல் வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. ஆனால் இந்த புதிய வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

இத்துடன் சில பொருட்கள் மீதும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆல்கஹால் 100%, தங்கம் மற்று வெள்ளி 2.5% , பாமாயில் 17.5% , சூரியகாந்தி எண்ணெய் 35%, ஆப்பிள் மற்றும் பட்டாணி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

Most important things you need to know about budget 2021-2022

‘தளபதி’ விஜய்யுடன் 2 காமெடியன்களை இணைக்க நெல்சன் திட்டம்

‘தளபதி’ விஜய்யுடன் 2 காமெடியன்களை இணைக்க நெல்சன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி-65’ல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாஸ்டர் பட குட்டி ஸ்டார் பூவையார் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு & விடிவி கணேஷ் ஆகிய இருவரும் தளபதி 65-ல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல், சர்கார், பிகில் திரைப்படத்தை அடுத்து நான்காவது முறையாக விஜய் – யோகி பாபு கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Top comedian to reunite with Thalapathy Vijay
1TgzpaIukf8zpcrs4rU0b40B8Dc
images

‘கடமையை செய்’-ய ஜோடியாக இணையும் SJ சூர்யா & யாஷிகா ஆனந்த்

‘கடமையை செய்’-ய ஜோடியாக இணையும் SJ சூர்யா & யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadamaiyai Sei (1)நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடமையை செய்’.

பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த “முத்தின கத்திரிக்கா” என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயகுகிறார்.

ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி

இசை – அருண்ராஜ்

கலை – M.G.முருகன்

எடிட்டிங் – N.B.ஸ்ரீகாந்த்

ஸ்டண்ட் – பிரதீப் தினேஷ்

நடனம் – தீனா, சாய் பாரதி

தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட்

மக்கள் தொடர்பு – மதுரை செல்வம், மணவை புவன்.

தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகிர் உசைன்

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

SJ Suryah and Yashika Aanand joins for a new film

More Articles
Follows