தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே காங்கிரஸ் அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது பிரச்சாரத்தில்.. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இத்துடன் வாக்காளர்களை திமுகவினரை அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
அது குறித்து பேசும்போது.. ‘ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்’ என கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான நவீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தில்.., ‘ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா?
நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
Director Naveen voice against edappadi palanisamy