எடப்பாடி கண்ணீர்.. ஸ்டாலின் கண்டிப்பு..; முதல்வரின் பிறப்பை அசிங்கப்படுத்திய 2ஜி ராசா மன்னிப்பு கேட்டார்

எடப்பாடி கண்ணீர்.. ஸ்டாலின் கண்டிப்பு..; முதல்வரின் பிறப்பை அசிங்கப்படுத்திய 2ஜி ராசா மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 26ல் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தபோது நீலகிரி திமுக எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா என்பவர் முதல்வர் பழனிசாமியையும் அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார்.

கள்ள உறவில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.

தமிழக பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அவரது கேவலமான பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வேண்டும்,’ என முதல்வர் பழனிசாமி் கண்ணீர் மல்க பிரச்சாரத்தில் பேசினார்.

திமுகவினர் கண்ணியத்தோடு பேச வேண்டும் என அக்கட்சி தலைவர் முக. ஸ்டாலினும் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் தாய் குறித்து, ஆபாசமாக பேசிய ராசாவின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்’ என பலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து ஊட்டியில் கூறியதாவது…

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி பேசினேன்

ஆனால் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது.

நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன்.

எனது பேச்சால் முதலமைச்சர் காயப்பட்டார் என்ற செய்தி படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

எனவே எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை.”

இவ்வாறு ஆ ராசா பேசினார்.

DMK’s A Raja apologises for ‘offensive’ jibe at Palaniswami

EPS Raja

பணம் குவார்ட்டர் பிரியாணி தர்றவங்க மாஸ்க் கூட தர்றதில்லையே..; மக்கள் நலனில் வேட்பாளர்கள் அலட்சியம்

பணம் குவார்ட்டர் பிரியாணி தர்றவங்க மாஸ்க் கூட தர்றதில்லையே..; மக்கள் நலனில் வேட்பாளர்கள் அலட்சியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவின் 2வது அலை தற்போது உருவெடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 2000-ஐ தாண்டிவிட்டது.

கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி, கொரோனா பரவலை தடுக்க முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இப்போது, இதே மார்ச் மாதம், மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆனால் அரசாங்கமோ அரசியல் கட்சியினரோ கொரோனா அச்சுறுத்தலை அலட்சியம் செய்து வருகின்றனர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிரசார நேரத்தை குறைக்கலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்லலாம்.

தங்கள் கூட நிறைய நபர்களை கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லாமல் குறைவாக கூட்டலாம்.

மேலும் பணமும் குவார்ட்டரும் பிரியாணியும் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மக்களுக்கு மாஸ்க் கொடுக்கலாமே என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

பொதுமக்களும் தங்கள் சமூக பொறுப்பை உணர வேண்டும்..

TN Politicians Election Campaign and Corona Virus Spread updates

டெய்லி ‘சீயான்-60’ அப்டேட்ஸ்..: அப்செட்டாகும் அஜித் ரசிகர்கள்..!

டெய்லி ‘சீயான்-60’ அப்டேட்ஸ்..: அப்செட்டாகும் அஜித் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’.

இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அண்மையில் இப்பட படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த த்ரில்லர் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட்டுகளை தினம் தினம் அறிவித்து வருகின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர், காஸ்ட்டியூம் டிசைனர் முதல் லைட் மேன் வரை தெரிவிக்கின்றனர்.

இதனால் விக்ரம் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

ஆனால் இதை பார்க்கும் அஜித் ரசிகர்களோ பலமுறை ‘வலிமை’ அப்டேட் கிடைக்காமல் டென்சனில் உள்ளனர்.

Ajith fans upset with Chiyaan 60 updates

நிற்க முடியாமல் பேச முடியாமல் விஜயகாந்த் பிரச்சாரம்..; தேம்பி அழும் தேமுதிக தொண்டர்கள்

நிற்க முடியாமல் பேச முடியாமல் விஜயகாந்த் பிரச்சாரம்..; தேம்பி அழும் தேமுதிக தொண்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிடுகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

இவர் மற்ற தொகுதிகளுக்கு செல்லாமல் இங்கேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

இவரது தம்பி சுதீஷ்க்கு கொரோனா தொற்று உள்ளதால் அவராலும் பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு செல்ல முடியவில்லை்.

எனவே பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைத்து வந்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில், அவரை திறந்த வேனில் நிற்க வைத்திருந்தனர்.

ஏற்கெனவே உடல்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரால் வெகு நேரம் நிற்க முடியவில்லை.

மேலும் அவரால் பேசவும் முடியவில்லை என்பதால் கம்பியை பிடித்துக் கொண்டார்.

இதனைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு காலத்தில் நடிகர் சிவாஜிக்கு பிறகு பக்கம் பக்கமாக வீர வசனங்களை சினிமாவில் பேசியவர் கேப்டன்.

சுவற்றில் பாய்ந்து அடித்து உதைத்து ஆக்சனிலும் அசத்தியவர்.

அந்த கம்பீரமானவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்று அவரின் நிலையறிந்து எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் விடுகின்றனர்.

Captain Vijayakanth health issue during Election Campaign 2021

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ் கூட்டணி..?

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தி்ல் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் நடிக்கப் போகிறார் சூர்யா.

இந்த படங்களை முடித்து விட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தகவல்கள் வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘கஜினி, ஏழாம் அறிவு’ ஆகிய படங்கள் இருவருக்குமே நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

10 வருடங்களுக்கு முன் அமைந்த கூட்டணி மீண்டும் அமையாதா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் 65வது படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டதால் டாப் ஹீரோவுடன் இணைய காத்திருக்கிறாராம் முருகதாஸ்.

எனவே தான் சூர்யா படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

After 10 years Suriya and Murugadoss again joins hands together

பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ 1500 மதிப்புள்ள கூப்பன்களை 5 மாதம் வழங்கும் ‘நவரசா’ படக்குழு

பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ 1500 மதிப்புள்ள கூப்பன்களை 5 மாதம் வழங்கும் ‘நவரசா’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில்‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருவதை நாம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம்.

இதில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா, நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த ஆந்தாலஜி உருவாகுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.

ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள்.

இதிலிருந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் விலகியதால் இயக்குநர் வசந்த் இணைந்திருக்கிறார்.

வசந்த் இயக்கத்தில் அதிதி பாலன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி அளிக்கும் வகையில் ரூ 1500 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது.

இதனை வைத்து வீட்டிற்கு தேவையான 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை அவர்கள் வாங்கி கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது.

Navarasa teams great gesture to FEFSI Union

More Articles
Follows