தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் 26ல் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தபோது நீலகிரி திமுக எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா என்பவர் முதல்வர் பழனிசாமியையும் அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார்.
கள்ள உறவில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.
தமிழக பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அவரது கேவலமான பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வேண்டும்,’ என முதல்வர் பழனிசாமி் கண்ணீர் மல்க பிரச்சாரத்தில் பேசினார்.
திமுகவினர் கண்ணியத்தோடு பேச வேண்டும் என அக்கட்சி தலைவர் முக. ஸ்டாலினும் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் தாய் குறித்து, ஆபாசமாக பேசிய ராசாவின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்’ என பலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து ஊட்டியில் கூறியதாவது…
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி பேசினேன்
ஆனால் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது.
நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன்.
எனது பேச்சால் முதலமைச்சர் காயப்பட்டார் என்ற செய்தி படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
எனவே எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை.”
இவ்வாறு ஆ ராசா பேசினார்.
DMK’s A Raja apologises for ‘offensive’ jibe at Palaniswami