BREAKING ரஜினி & அஜித் படங்களில் நடித்த ‘டிக் டாக்’ புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை

BREAKING ரஜினி & அஜித் படங்களில் நடித்த ‘டிக் டாக்’ புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கோடிக்கணக்கான திறமையானவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கிய காலம் அன்று.

ஆனால் இன்றளவில் டிக் டாக்.. இன்ஸ்ட்டாகிராம், ரீல்ஸ்.. குறும்படம் யூடியூப்.. உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மிருனாளிணி, முல்லை கோதண்டம், கோபி சுதாகர், புளூ சட்டை மாறன், இட்ஸ் பிரசாந்த், பிஜிலி ரமேஷ், ஜி பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்ட பல நபர்களை நாம் இந்த வரிசையில் சேர்க்கலாம்.

அதுபோல டிக் டாக் மற்றும் ரீல்ஸ் மூலம் புகழ் பெற்றவர் டான்ஸர் ரமேஷ். இவருக்கு சிறு வயது முதலே நடன திறமை இருந்தாலும் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 40 வயதிலேயே இவருக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றார். நடிகைகள் சினேகா சங்கீதா ஓவியா & நடன இயக்குனர் பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இவரது நடனங்களை கண்டு பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் டான்சர் ரமேஷ் இன்று தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் டான்சர் ரமேஷ்.

சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் ‘துணிவு’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்திலும் டான்சர் ரமேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது..

Tik Tok Reels fame Dancer Ramesh committed Suicide

‘வாரிசு’ தயாரிப்பாளர் மீம்ஸ் டயலாக்கை மேரேஜ் பேனராக அடித்த விஜய் ரசிகர்கள்

‘வாரிசு’ தயாரிப்பாளர் மீம்ஸ் டயலாக்கை மேரேஜ் பேனராக அடித்த விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படம் அண்மையில் வெளியானது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்ற போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ மேடையில் பேசினார்.

அவர் பேசும்போது…

“வாரிசு படத்தில் காமெடி வேணுமா.. காமெடி இருக்கு.. ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் இருக்கு… பாட்டு வேணுமா பாட்டு இருக்கு.. டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு… என தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்.

இதை பலர் மீம்ஸ் செய்தும் கிண்டல் செய்தும் ட்ரோல் செய்தும் வந்தனர்.

ஒரு சில சமூக ஆர்வலர்கள் இதனை கடுமையாக கண்டித்தனர்.

கொஞ்சமே தமிழ் தெரிந்த ஒரு நபர் தமிழை கற்றுக்கொண்டு பேசி வருகிறார். அவரை கிண்டல் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

இந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் தில்ராஜ் பேசிய வசனத்தை பிளக்ஸ் பேனரில் டிசைன் செய்துள்ளனர்.

“இனி பொண்டாட்டி கிட்ட.. அடி வேணுமா அடி இருக்கு../குத்து வேணுமா குத்து இருக்கு../மொத்தத்துல உனக்கு ஆப்பு இருக்கு.. ஹாஃப்பி மேரேஜ் லைஃப் நண்பா..” என கிண்டலாக நண்பனை வாழ்த்தி பேனர் அடித்துள்ளனர்.

Dil raju memes dialogue in Vijay fans flex banner

தனுஷ் – செல்வராகவன் மோதல்.; அண்ணன் – தம்பி இப்படி செய்யலாமா.?

தனுஷ் – செல்வராகவன் மோதல்.; அண்ணன் – தம்பி இப்படி செய்யலாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அல்லோரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கில் சார் என தலைப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக இருந்த இந்த படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளால் தாமதமானது.

இதனால் 2023 பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதே நாளில் தனுஷின் அண்ணனும் இயக்குனரும் நடிகருமான செல்வராகனின் ‘பகாசூரன்’ படம் வெளியாக உள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டது.

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி நடித்துள்ளார்.

தம்பி தனுஷின் ‘வாத்தி’ படம் ரிலீஸாகும் நாளில் அண்ணன் செல்வராகவன் அவரின் ‘பகாசூரன்’ படத்தை ரிலீஸ் செய்யலாமா.? எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

பகாசூரன்

Dhanush Vaathi and Selvaraghavans Bakasuran clash on same day

பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மபூஷன் விருது.; பத்ம விருதுகள் முழு விவரம்..

பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மபூஷன் விருது.; பத்ம விருதுகள் முழு விவரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருப்போம்.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில் பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு…

கலைத் துறையைச் சேர்ந்த ஜாகிர் உஷைன், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, அமெரிக்காவைச் சேர்ண்டஹ் அறிவியல் பொறியியல் துறை வல்லுநர் சீனிவாச வரதன் என மொத்தம் 6 பேருக்கு பத்மவிபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை – மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த முலாயம் சிங் யாதவ்வுக்கு பொது வாழ்க்கையில் சேவையாற்றியதற்காக பத்மவிபூஷன் விருது.

குஜராத்தைச் சேர்ந்த மறைந்த புகழ்பெற்ற கட்டிடக்கலை பொறியாளர் பால்கிருஷ்ணா தோஷிக்கு பத்ம விபூஷன் விருது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகிய இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்பட 9 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26.. குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது மொத்தம் 91 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vani Jayaram to be honoured with Padma Bhushan

ஒரே மக்கள் திலகம்.. ஒரே நடிகர் திலகம்.. ஒரே சூப்பர் ஸ்டார் தான் – ஒய்.ஜி.மகேந்திரன்

ஒரே மக்கள் திலகம்.. ஒரே நடிகர் திலகம்.. ஒரே சூப்பர் ஸ்டார் தான் – ஒய்.ஜி.மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

இந்த விழாவில் ஒய் ஜி மகேந்திரா பேசுகையில்…

“ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரே நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரே கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியும்,” என்று கூறினார்.

சாருகேசி

சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும். இந்த நாடகத்தை ஒய் ஜி மகேந்திரா இயக்கியுள்ளார்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது.

சாருகேசி

இந்த நாடகத்தை திரைப்படமாக எஸ் ஏ ஆர் பி பிக்சர் ப்ரொடக்ஷன்ஸ் (ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி ப்ரொடக்ஷன்) தயாரிக்கவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த் எஸ் சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார்.

ஒய் ஜி மகேந்திரா முதன்மை வேடத்தில் நடித்து இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

சாருகேசி

Rajinikanth is the one and only Superstar says Y Gee Mahendra

ஒய்ஜிஎம் நாடகம் பார்க்க உள்ளே விடவில்லை.; ‘ரகசியம் பரம ரகசியம்’ சொன்ன ரஜினி

ஒய்ஜிஎம் நாடகம் பார்க்க உள்ளே விடவில்லை.; ‘ரகசியம் பரம ரகசியம்’ சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

சாருகேசி

அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில்…

“1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேன். இது எல்லாமே காலத்தின் செயல்.

நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யுஏஏ நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இது மிகவும் கட்டுக்கோப்பான குழுவாகும். இதில் படித்தவர்கள், பல துறை வல்லுநர்கள் இருந்தனர்,” என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்து இருந்தால் இந்த நாடகம் இன்னொரு வியட்நாம் வீடாக இருந்து இருக்கும், என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த ட்ராமாவை பொருத்தவரை கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், அவர்களது குணத்திற்கு உண்டான வசனங்களை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒய் ஜி மகேந்திரா போன்ற ஒரு நடிகரை சினிமா சரியாக பயன்படுத்தவில்லை,” என்று ரஜினிகாந்த் கூறினார்.

இந்த நாடகம் படமாக எடுக்கப்படும்போது மிகப்பெரிய வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வசந்த் திரைக்கதை எழுதவுள்ளார், அது இன்னும் சிறப்பானதாக இருக்கும், என்று அவர் தெரிவித்தார்.

“என் திருமணம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் ஒய் ஜி மகேந்திரா தான். மது, அசைவ உணவு பழக்கம் போன்றவை ஒருகாலத்தில் என்னோடு ஒட்டி இருந்தன. வெஜிடேரியன்ஸை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும்.

என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா தான்,” என்று சூப்பர் ஸ்டார் கூறினார். புகை, மது போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டு விடுமாறு அனைவரையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

சாருகேசி

Rajini kickstarts Y Gee Mahendra directorial and starrer Charukesi

More Articles
Follows