56 வருடங்களுக்குப் பிறகு வரும் ‘சிவன்’.: ஆங்கில மொழியிலும் உருவாகும் தமிழ் ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’

56 வருடங்களுக்குப் பிறகு வரும் ‘சிவன்’.: ஆங்கில மொழியிலும் உருவாகும் தமிழ் ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 56 வருடங்களுக்குப் பின் சிவனை கதைநாயகனாக கொண்ட படமாக மாயன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது மாயன் திரைப்படம்.

மாயன் என்றால் கால பைரவனின் பிள்ளைகள் என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் மாயர்களே.

அப்பேர்ப்பட்ட மாயர்களுக்கும் நம் மூதாதையர்களும் ஒரு பெரிய உறவு இருக்கிறது.

அந்த வரலாற்று உறவின் அடிப்படை தான் மாயன் படத்தின் கதைக்கரு.

முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதைநாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் நடித்துள்ளனர்.

ஜான்விஜய், தீனா,கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே கே மேனன், உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆங்கில பதிப்புக்காக அனைவருமே ஆங்கிலம் பேசி நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், ராஜேஷ் கண்ணா. இந்த பிரமாண்ட பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. இணை தயாரிப்பு ஜி.வி.கே.எம் எலிஃபண்ட் பிக்சர்ஸ்..

Thriller fantasy film Maayan will be made in 4 languages

தோனி – விஜய் மீட்டிங்கை பொறுக்க முடியாமல் அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா?

தோனி – விஜய் மீட்டிங்கை பொறுக்க முடியாமல் அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட்டில் தல என்றழைப்படும் தோனியும் சினிமாவில் தளபதி என்றழைக்கப்படும் விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் இன்று சந்தித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ பட சூட்டிங்கில் விஜய்யும் CSK கிரிக்கெட் விளம்பரத்தில் தோனியும் கலந்துக் கொண்டுள்ளனர்.

அப்போது இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

(இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.)

இதனால் விஜய் ரசிகர்கள் தல தளபதி மீட்டிங் என போட்டோக்களை போட்டு வைரலாக்கினர். வெகுநேரம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

தோனியை விஜய் ரசிகர்கள் தல என்று அழைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அஜித் ரசுகர்கள்.. “ஒரே தல அஜித்” என ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இத்துடன் தளபதி என்றால் அது ஸ்டாலின் தான் எனவும் போட்டோக்களை போட்டு வருகின்றனர்.

Ajith fans creates trending tag on Vijay Dhoni meet

காதலர்களுக்காகவே படம் இயக்கிய கதிரின் அடுத்த பட அறிவிப்பு

காதலர்களுக்காகவே படம் இயக்கிய கதிரின் அடுத்த பட அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில இயக்குனர்களை கமர்ஷியல் இயக்குனர்கள்… ஆக்சன் இயக்குனர்கள்.. ரொமான்டிக் இயக்குனர்கள் என வரிசைப்படுத்துவோம்.

அதுபோல இயக்குனர் கதிர் என்றால் காதலர்களின் இயக்குனர் என சொல்லலாம்.

காதல் தேசம், இதயம், உழவன், காதலர் தினம், காதல் வைரஸ்… என காதல் மய்யமாகவே பல படங்களை இயக்கியிருக்கிறார் கதிர்.

பல வருட இடைவெளிக்குப்பின், தற்போது மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

‘காதல் தேசம்,’ ‘இதயம்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை கதிர் இயக்குவார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கதிர்.

புதுமுகம் கிஷோர் என்பவரை தன் பட நாயகனாக்கி டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை ஆர்கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ரங்கநாதன் தயாரிக்கிறார்.

விரைவில் சூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

Hit director Kathir’s next film announcement is here

வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்.? மத்திய அரசை மறைமுகமாக சாடிய கமல்

வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்.? மத்திய அரசை மறைமுகமாக சாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இதனையடுத்து சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைமுகமாக மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கமல்ஹாசன் தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம்.

மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?

என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

MNM leader Kamal Haasan slams central government

காந்தி-நேரு சிறைக்கு போகலையா.? தமிழச்சி வளர்ச்சி அடைவது பிடிக்கலையா.? – மீரா மிதுன்

காந்தி-நேரு சிறைக்கு போகலையா.? தமிழச்சி வளர்ச்சி அடைவது பிடிக்கலையா.? – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என கூறியுள்ளார்.

இவையில்லாமல் மேலும் அதில் மீரா பேசியதாவது…

“தமிழ் பேச தெரிந்த ஒரு தமிழ்நாட்டு பெண் வளர்ச்சி அடைவது இங்குள்ள ஆண்களுக்கு பிடிக்காது.

இங்கு மற்ற மொழி பேசும் பெண்கள் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள். காரணம் இவர்களின் ஆசைக்கு அவர்கள் இணங்குகிறார்கள்.

என் மீது எல்லோருமே ஆசைப்படுவது தான் என்னோட இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

ஆனாலும் சீக்கிரமே இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் மீராமிதுன்.

Meera Mithun said even Gandhi and Nehru has gone to jails

அஜித் & சிம்பு படங்களின் அடுத்த சிங்கிள்ஸ் ரெடி.; மாஸ் காட்டும் யுவன்

அஜித் & சிம்பு படங்களின் அடுத்த சிங்கிள்ஸ் ரெடி.; மாஸ் காட்டும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’.

இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.

இந்த் படத்தின் முதல் சிங்கிள் ‘மெஹர்சிலா’ ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானது.

எனவே ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க அவ்வப்போது ‘வலிமை’ மற்றும் ‘மாநாடு’ பட அப்டேட்டையும் கொடுத்து வருகிறார் யுவன்.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்டார்,

சீக்கிரமே ‘வலிமை, மாநாடு’ படங்களின் அடுத்த சிங்கிள் வர உள்ளது, யுவன் ரெடி செய்துவிட்டார்,” என வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

Ajith and Simbu films next single is out soon says Yuvan

More Articles
Follows