தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில நாட்களாகவே, சினிமா உலகின் ஹாட் டாப்பிக் ரஜினியின் இலங்கை பயணமும், அதன்பின்னர் அது ரத்தானது பற்றிய விவாகரமும்தான்.
இந்நிலையில் இதுகுறித்து பேச சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன்.
அப்போது அவர் கூறியதாவது…
“தற்போது இலங்கையில் அசாதரண சூழ்நிலை உள்ளது.
இலங்கையில் சிங்கள ராணுவத்திடம் சரணடந்தவர்களின் நிலை என்ன என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
போரின் போது ஆக்கரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால் சிங்கள அரசு அந்த போராட்டத்தை திசை திருப்பிவிடும்.
இதனால் உலக அரங்கில் பேசப்படும் இலங்கை தமிழர் பிரச்னை தடைப்பட்டுவிடும்.
அவர் இப்போது செல்ல வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன்.
மற்றபடி அவர் இனிவரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.” என்று தெரிவித்தார் திருமாவளவன்.
Thirumavalavan explains why he stopped Rajinis Srilanka trip