காதல் கலகலப்புடன் காதல் கவிதையாக உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர்

காதல் கலகலப்புடன் காதல் கவிதையாக உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது.

2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இயக்கியுள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Trailer link : https://www.filmistreet.com/video/kaathuvaakula-rendu-kadhal-trailer/

The trailer for Vijay Sethupathi’s Kaathuvaakula Rendu Kaadhal is here

இளையராஜாவே பாடல்கள் எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி’யை பிடித்த பிவிஆர்

இளையராஜாவே பாடல்கள் எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி’யை பிடித்த பிவிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்கா குருவி’.

இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,
பிரபல தியேட்டர் நிறுவனமான PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள், இவர்களுக்கிடையே ஒரு ‘ஷீ’ –
இதை, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக , உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய முயற்சியாக உருவாகியுள்ளார்.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.

இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது ரசிகர்களுக்கு ஒரு பேருணர்வை தரும்.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை பார்த்த PVR பிக்சர்ஸ் குழுவினர், உடனடியாக படத்தை வெளியிட சம்மதித்து, குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டுமென கோடை கொண்டாட்டமாக, மே 6ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் 25 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

PVR Pictures Set to release the film Akka Kuruvi directed by Saamy

நீதி தேடி அலையும் கீர்த்தியோடு இணைந்த செல்வராகவன்.; மே 6ல் ‘சாணிக்காயிதம்’

நீதி தேடி அலையும் கீர்த்தியோடு இணைந்த செல்வராகவன்.; மே 6ல் ‘சாணிக்காயிதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான “சாணிக்காயிதம்” திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பொன்னி (கீர்த்தி சுரேஷ்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது, விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன்) இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார் இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்…

“சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்”.

“வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன்.

பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில் அமைந்துள்ளது. பழிவாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”

“ ஒவ்வொரு வகையான கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்”.

திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறுகையில்..

“சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்”.

அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத்திரைப்படத்தைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”

டீசர் இணைப்பு : https://www.filmistreet.com/video/saani-kaayidham-official-tamil-teaser

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் கொண்ட பிரைம் வீடியோ வரிசையில் சாணிக்காயிதம் திரைப்படம் இணையவிருக்கிறது. அதில் இந்திய படங்களான Sharmaji Namkeen, Gehraiyaan,Shershaah, Sardar Udham, Jai Bhim,GulaboSitabo, Shakuntala Devi, Coolie No. 1, Durgamati, Chhalaang, SooraraiPottru,V, CU Soon, Nishabhdam, Halal Love Story, Middle Class Melodies, Maara, BheemasenaNalamaharaja, Mane No. 13, Penguin, Law, SufiyumSujatayum, PonmagalVandhal, French Biriyani மற்றும் பல படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ மேலும் சில இந்தியாவில் தயாரிக்க பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான Bestseller, Inside Edge Season 3,Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa,Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – AzaadiKeLiye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, மற்றும் Inside Edge ஆகியவற்றையும் வழங்குகிறது.

விருது வென்ற மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்ற உலகளாவிய அமேசான் தொடர்களான Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, மற்றும் The Marvelous Mrs. Maisel போன்றவற்றையும் வழங்குகிறது, மேலும் நேரத்தைச் செலவிடுவதற்கும், எப்போது, எங்கு வேண்டுமானாலும் பார்ப்பதற்குமான ஏராளமான தேர்வுகளை வழங்குவதில் முழு கவனத்துடன் பிரைம் வீடியோ இயங்கி வருகிறது. இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவைகள் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வழங்கபட்டு வருகிறது.

பிரைம் உறுப்பினர்கள், சாணிக்காயிதம் திரைப்படத்தை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், ஸ்மார்ட் டீவி, மொபைல் போன்கள், Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV மற்றும் ஏனைய இயந்திரங்கள் வழியாக காணலாம். பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் போன் மற்றும் டேப்ளடில் எபிசோடுகளை டவுட்லோடு செய்து எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் ஆப்லைனில், கூடுதல் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம்.
பிரைம் வீடியோ இந்தியாவில், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பிரைம் உறுப்பினர் சேர்கை வருடத்திற்கு வெறும் ₹1499- ல் கிடைக்கிறது, புது பயனாளர்கள் மேலும் தகவலுக்கு www.amazon.in/prime – யை பார்க்கலாம்.

Prime Video Announces the Worldwide Premiere of Keerthy Suresh and Selvaraghavan Starrer Saani Kaayidham

விஜய் ஆண்டனியுடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘ரத்தம்’ பட டப்பிங் அப்டேட்ஸ்

விஜய் ஆண்டனியுடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘ரத்தம்’ பட டப்பிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது.

Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது.

“ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Infiniti Film Ventures உறுதி தந்தபடி, முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய, அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகிறது.

“ரத்தம்” படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

மேலும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன்,  நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு “ரத்தம்” திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி இதே Infiniti Film Ventures தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது.

Vijay Antony starrer Raththam movie shoot updates

‘டேக் டைவர்ஷன்’ திரைப்படத்தை பாராட்டிய ‘கேஜிஎஃப்’ இயக்குநர்

‘டேக் டைவர்ஷன்’ திரைப்படத்தை பாராட்டிய ‘கேஜிஎஃப்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மே மாதம் 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்.

இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது.

நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

டேக் டைவர்ஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் சில வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

‘டேக் டைவர்ஷன் ‘படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் ஏற்கெனவே சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றியவர்.

வழக்கம்போல கேஜிஎஃப் படக்குழுவினரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார்.

தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு…’ சூப்பரூ..; இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய ராம்ஸ் & ஜான் விஜய்

கேஜிஎஃப் படத்தில் நிறைய தமிழ் நடிகர்களும், தமிழ் பேசும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற வேண்டியிருந்தது. இந்நிலையில் சிவாவைப் பிடித்துப்போய் அவருக்கு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பு வாய்ப்பைத் தந்ததுடன் உதவி இயக்குநராகவும் அவரை அருகில் வைத்துக் கொண்டு விட்டார் இயக்குநர் பிரசாந்த் நீல். இப்படி கேஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு ஆண்டுகாலம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையும் பணியாற்றியவர்தான் நடிகர் சிவா.

நடிகர் சிவா கேஜிஎஃப் படத்தில் பணியாற்றியது பற்றிக் கூறும்போது…

“ஒரு பெரிய பிரமாண்டமான படத்தில் பணியாற்றியது 20 படங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது டேக் டைவர்ஷன் ட்ரைலரை பார்த்து என்னை பாராட்டினார்.

குறிப்பாக படத்தின் டேக் டைவர்ஷன் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது என்று கூறினார்.

இப்படத்தில்’பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் முதன்மை நாயகனாக நடித்துள்ளார்.

பல படங்களில் கையில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் ரவுடியாகவும் முரட்டுத்தனமாகவும் வில்லத்தனமாகவும் நடித்துள்ளவர் .இப்படத்தில் கையில் சிப்ஸ் பாக்கெட்டுடன் காதல் பார்வையுடன் முற்றிலும் மாறுபட்டு முழு கதாநாயகனாகத் தோன்றுகிறார். நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். அதே போல ‘யாரும் எனக்கில்லை ஏனடி ? ‘ என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னர்தான் இப்படம்.

‘டேக் டைவர்ஷன்’ படம் மே 6 முதல் உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

KGF director wishes to take diversion team

விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும்.; கமிஷனர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் மனு

விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும்.; கமிஷனர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் இன்று (22-04-22) காலை 11 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்தார்.

அதில்,

பொருள் : ரூபாய் 1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.

” மெரினா பிக்சர்ஸ் ” என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ” லிங்கா “, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ” புறம்போக்கு ” உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ஆம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் நெருக்கமான நட்பு உருவானது.

அந்த சமயத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்களான ” நேற்று இன்று “, “ இஷ்டம்” , “ புலிவால் ” , “ ஜன்னல் ஓரம் ” ஒரு ஊருல இரண்டு ராஜா ” ” காவல் ” அஞ்சல ” மாப்பிளை சிங்கம் ” ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியதாலும், அவருக்கு மார்க்கெட் இல்லாததாலும் விமலை வைத்து படம் தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி பாதியில் கைவிடப்பட்ட ” மன்னர் வகையறா ” என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார் . நானும் என் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து ரூ. 5 கோடி பணம் கடன் வாங்கி கொடுத்தேன்.

இந்நிலையில் 30.08.2017 ஆம் ஆண்டு சாலிகிராமத்திலுள்ள சிகரம் மினி ஹாலில் நடந்த நடிகர் விமலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார்.

விமலின் ‘குலசாமி’-க்கு வசனம் எழுதி கொடுத்த விஜய்சேதுபதி

அந்த நிகழ்ச்சியில் ” களவாணி – 2 ” என்ற படத்தை தான் தயாரிக்க இருப்பதாக மேடையில் அறிவித்தார். அப்போது களவாணி படத்தின் இயக்குநர் சற்குணமும் உடன் இருந்தார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி என்னை சந்தித்த நடிகர் விமல் ” களவாணி – 2 ” படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்கி கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் படத்தை முடித்து தந்து விடுவதாகவும் கூறியதையடுத்து அக்டோபர் 14 ஆம் தேதி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ. 1.5 கோடியை முன்பணமாக கொடுத்தேன்.

ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து ” களவாணி – 2 ” படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்க வில்லை.

ஒரு கட்டத்தில் ” களவாணி – 2 ” படத்தை இயக்குநர் சற்குணம் தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ. 1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாக உறுதி கூறியதை நம்பி நானும் அமைதி காத்தேன்.

‘ களவாணி – 2 ” படத்தின் வெளியீட்டு தேதி உறுதியான நிலையில் நடிகர் விமலிடமிருந்து எனக்கு வர வேண்டிய ரூ. 1.5 கோடி பணம் வராததால், என் அலுவலக ஊழியரும், தயாரிப்பு மேற்பார்வையாளருமான கமரன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ” களவாணி -2 ” பட வெளியீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு (வழக்கு எண் : C.S.No. 250/ 2019) பெற்றேன்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் என் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரை விசாரித்த அதிகாரிகளிடம் நான் வைத்திருந்த ஆவணங்களை காட்டி, களவாணி 2 படத்தின் காப்பி ரைட் உரிமை என்னிடம் உள்ளது என்பதை விளக்கிய போது, அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்ட காவல் அதிகாரிகள், நடிகர் விமலை உடனடியாக விசாரணைக்கு வரும்படி அழைத்தனர்.

உடனடியாக ஒரு அரசியல் பிரபலத்தை தொடர்பு கொண்ட நடிகர் விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும் படியும் கேட்டதால் 13.05.2019 அன்று சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம்.

இந்த செய்தி அன்றைய நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியானது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை நடிகர் விமல் தராததால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து, புகாரின் அடிப்படையில் நிர்வாகிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எனக்கு சேர வேண்டிய ரூ. 1.5 கோடியை உரிய வங்கிவட்டியுடன் திருப்பித் தந்து விட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை (காசோலை எண் :307204 ) நடிகர் விமல் என்னிடம் வழங்கினார்.

அதனை வங்கியில் செலுத்திய போது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவும், என் நண்பர் கோபி என்பவர் நடிகர் விமல் மீது கொடுத்துள்ள ரூ. 5 கோடி மோசடி புகாரை திசை திருப்புவதற்காகவும் நடிகர் விமலை நான் ஏமாற்றிவிட்டதாக பொய்யான புகாரை தங்களிடம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தவறான, அவதூறான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருகிறார்.

எனவே ஐயா அவர்கள் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

நன்றி

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Producer Singaravelan Complaint against Actor Vimal at commissioner office

More Articles
Follows