தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டியன் ஸ்டோர் டிவி சீரியல் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சித்ரா.
பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாகவும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் இன்று அதிகாலை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துக் கொண்டார். அப்போது அவருக்கு நிச்சயிக்கப்பட்ட கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.
சித்து மறைவுக்கு அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும், ரசிகர் ரசிகைகளும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்ராவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது.. இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும் ஹேமந்த்க்கும் ரிஜிஸ்டர் திருமணம் நடைபெற்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா புகைப்பட ஆல்பம்
2021 பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருந்தார்.
என் மகள் சித்ரா முகத்தில் காயம் இருந்தது.
அவர் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
யார் மீதும் சந்தேகம் இல்லை. போலீஸ்தான் அதை விசாரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
நாளை சித்ராவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
The reason behind serial actress Chitra suicide