தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.
‘அண்ணாத்த’ படத்தை அடுத்து ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.
முதன் முறையாக ரஜினி படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முதன் முறையாக ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.
இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர்.
இந்த நிலையில் ‘தலைவர் 169’ படத்தை முடித்துவிட்டு ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.
இந்த படத்தை ரஜினி மகள்களான ஐஸ்வர்யா & சௌந்தர்யா தயாரிக்கிறார்களாம்.
ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் ஏற்கெனவே ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அதன் பிறகு படத்தை இயக்காமல் தன் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.
தற்போது தன் மாமனார் ரஜினிக்காக மீண்டும் படம் இயக்க வருகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalaivar 170 project details here