தல போல வருமா..? அஜித்தே சொன்னாலும் அடங்காத ரசிகர்கள்

தல போல வருமா..? அஜித்தே சொன்னாலும் அடங்காத ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala fans started Ajith Birth day celebrationநாளை மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் பல கொண்டாட்டங்களுக்கு காத்திருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்கள் மிகுந்த வேதனையுடன் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஏழை மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் ரசிகர்கள் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அஜித் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

ஒரு பக்கம் தல சொல்லை தட்டக் கூடாது என்றாலும் அடங்காத அஜித் ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இணையத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.

எங்கள் தல போல வருமா? என கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

விதவிதமான வீடியோக்களையும் படங்களையும் டிசைன் செய்து அஜித் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர்.

ஆக நாளை சமூக வலைத்தளங்களை நிச்சயம் அஜித் ரசிகர்கள் தெறிக்கவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
நடிகர் அஜித்தை நாங்களும் ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகிறோம்.

ஹாப்பி பர்த்டே தல… தல போல வருமா..

Thala fans started Ajith Birth day celebration

ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி; நம்ப முடியல – கமல்

ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி; நம்ப முடியல – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal condolence message for Actor Rishi Kapoor deathநடிகர் ரன்பிர் கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார்.

ரிஷி கபூருக்கு வயது 67. இவரது மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ரிஷி கபூரின் மறைவு குறித்து ரஜினி மற்றும் கமல் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதயம் நொறுங்கியது.. ஆன்மா சாந்தியடையட்டும்.. என் அன்பு நண்பர் ரிஷி கபூர் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர்.

நம்ப முடியவில்லை சின்டூஜி (திரு ரிஷிகபூர்) எப்போதும் தயாராக ஒரு புன்னகையை வைத்திருப்பார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் இருந்தது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன் நண்பா. அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

https://www.filmistreet.com/cinema-news/veteran-bollywood-actor-rishi-kapoor-passes-away/

Rajini and Kamal condolence message for Actor Rishi Kapoor death

BREAKING நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை நடிகர் ரிஷி கபூர் மரணம்

BREAKING நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை நடிகர் ரிஷி கபூர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran Bollywood actor Rishi Kapoor passes awayஒரு பக்கம் கொரோனா பலி பலரை அச்சுறுத்தி வரும் நிலையில் மறுப்பக்கம் பாலிவுட் நடிகர்களின் இயற்கை மரணம் திரையுலகில் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

நேற்று பிரபல நடிகர் இர்பான் கான் கேன்சர் நோயால் மரணமடைந்தார்.

அந்த சோகம் மறைவதற்குள் புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர் தனது 66 ம் வயதில் மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

இந்த செய்தியை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு “நடிகர் ரிஷி கபூர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். இந்த செய்தி என்னை முற்றிலும் அழித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமானவர் நடிகர் ரிஷி கபூர்.

கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதையடுத்து கடந்த 2019 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு நீத்து கபூர் என்ற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்ற மகனும் உள்ளனர்.

சில தகவல்கள்…

100  படங்களுக்கு மேல் நடித்தவர்..!
* இந்திப் படவுலகின் மெகா புரொட்யூஸர்-டைரக்டர் ராஜ் கபூரின் மகன் இவர்.
‘ மேரா நாம் ஜோக்கர் ‘ படத்தில் இளம் வயது ராஜ் கபூராக நடித்து 1970-ம் வருடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியவர்.
* 1973-ம் வருடம் ‘ பாபி ‘ மெகா ஹிட் படத்தில் ஹீரோவாக டிம்பிள் கபாடியா ஜோடியாக  ரா‌ஜ்கபூரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
* இவருடைய மனைவி நடிகை நீட்டு சிங்-டன் 12 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
* ரிஷிகபூரின் மகன் தற்போதைய இந்திப் படவுலகில் ‘ லீடிங் ஸ்டார் ‘ ரன்பீர் கபூர்..!

Veteran Bollywood actor Rishi Kapoor passes away

சிறுமி தரன்சியா வரைந்த பாட்டில் ஓவியங்கள்; கொரோனா நிதியளிக்க பார்த்திபன் உதவி

சிறுமி தரன்சியா வரைந்த பாட்டில் ஓவியங்கள்; கொரோனா நிதியளிக்க பார்த்திபன் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tharansia sold her Bottle Art and donated for Corona relief fundபுகழ்பெற்ற பிளேபாய் பத்திரிகையின் புகைப்பட கலைஞரும் ஓவியருமான எல்.ராமச்சந்திரன் மற்றும் சுனிதா தம்பதியருக்கு தரன்சியா என்றொரு மகளும் யானிஷ் என்றொரு மகனும் உள்ளனர்.

இதில் தரன்சியா சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே தன் தந்தையை போல ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். அதன்படி தன் 7 வயதில் இருந்தே ஓவியங்களை வரைந்து வருகிறார்.

எவரும் சிந்திக்காத வகையில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்து வரும் இவர் குப்பையில் வீசப்படும் பாட்டில்களை கொண்டு அதில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து இருக்கிறார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக பல்வேறு பிரபலங்கள் அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன் பாட்டில் ஓவியங்களை விற்று அதை கொரோனா நிவாரண நிதியாக வழங்க முடிவெடுத்துள்ளார் தரன்சியா.

அதன்படி தன் யோசனையை இவரின் தந்தை ராம் மற்றும் தாய் சுனிதாவிடம் சொல்ல இருவரும் பாட்டில் ஓவியங்களை விளம்பரப்படுத்தி நிதி திரட்ட ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி இவர்களின் குடும்ப நண்பரும் நடிகருமான பார்த்திபன் ரூ. 10 ஆயிரத்துக்கு ஓவியங்களை வாங்கியுள்ளார்.

மேலும் சிலரும் வண்ண வண்ண பாட்டில் ஓவியங்களை வாங்கியுள்ளனர்.

ஓவியங்கள் மூலம் கிடைத்த தொகை ரூ. 25 ஆயிரத்தை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சமூக விலகலை கடைப்பிடித்து வழங்கியுள்ளார் தரன்சியா. அப்போது இவரின் தந்தை எல் ராமச்சந்திரன் உடனிருந்தார்.

Tharansia sold her Bottle Art and donated for Corona relief fund

கூடுதல் தகவல்…

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உலக அமைதியை வலியுறுத்தி முக ஓவியம் வரையும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி கடந்தாண்டு நடந்தது.

அதில் 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவியர்களின் முகங்களில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான ஓவியங்கள் வரைந்து தரன்சியா நிறுவனத்தினர் சாதனை படைத்தனர்.

இதில் மாணவி தரன்சியா கலந்து கொண்டார் என்பதும் இந்த நிகழ்வுக்கு கின்னஸ் சாதனை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Tharansia sold her Bottle Art and donated for Corona relief fund

Tharansia sold her Bottle Art and donated for Corona relief fund

ஊரடங்கால் வீட்டுக்குள் உல்லாலா; கருக்கலைப்பு மாத்திரைக்கு தட்டுப்பாடு!

ஊரடங்கால் வீட்டுக்குள் உல்லாலா; கருக்கலைப்பு மாத்திரைக்கு தட்டுப்பாடு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abortion pills demand in Corona lock down daysகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், கடைகள் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருப்பதால் வருமானத்துக்கு வழியின்றி தவிக்கின்றனர்.

ஆனால் ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர்.

கணவன் மனைவி 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும் மற்றொரு புறத்தில்…. தாம்பத்ய உறவு மற்றும் கருத்தடைகளும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கணவன் மனைவி வீட்டிலேயே இருப்பதால் தம்பதிகளுக்கு இடையில் தாம்பத்திய உறவும் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.

பொதுவாக மருத்துவமனைக்கு, ஆண்கள், பெண்கள், கருக்கலைப்பு மாத்திரை கேட்பவர்கள் மிக அரிது.

ஆனால், இந்த ஊரடங்கில் சராசரியாக தினமும் நான்கு முதல், ஐந்து பேர் கருக்கலைப்பு மாத்திரைகளை கேட்டு வருகிறார்களாம்.

நிறைய மருந்தகங்களில், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்று தீர்ந்துவிட்டன. அதற்கும், தற்போது தேவை அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.

Abortion pills demand in Corona lock down days

குடும்ப சண்டைகளை ஊ…..திப் பெரிதாக்கிய ஊரடங்கு.. – வழக்கறிஞர் இந்து

குடும்ப சண்டைகளை ஊ…..திப் பெரிதாக்கிய ஊரடங்கு.. – வழக்கறிஞர் இந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Advocate Indhu talks about Domestic violence during lock downகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், கடைகள் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வருமானத்துக்கு வழியின்றி சிலர் தவிக்கின்றனர்.

சில நிறுவனங்களில் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது வரை இந்தியாவில் மட்டும் ஊரடங்கு 40 நாட்களை நெருங்கி வருகிறது.

சாதாரண நாட்களாக இருந்த போது கணவன், மனைவி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்வர். பின்னர் இரவு நேரத்தில் தான் வீடு திரும்புவர்.

அப்போது அசதியால் மற்ற வேலைகளை முடித்துவிட்டு உறங்கிவிடுவர்.

அதாவது சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அதனை மறந்துவிட்டு இரவில் மோதல் தவிர்த்து ஊடல் கூடும்.

ஆனால் தற்போது வீட்டிலே மன உளைச்சலுடன் ஆண்கள் பெண்கள் இருப்பதால் அதை வெளிப்படுத்தும் போது தம்பதியரிடையே மோதல் அதிகளவில் ஏற்படுகிறதாம்.

சின்னச்சின்ன சச்சரவுகள் கூட பூதாகரமாகி வன்முறையில் முடிவதாக நிறைய புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

பெண்களுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளதாம். இதில் குடும்ப சண்டைகள் தொடர்பான புகார்கள் மட்டும் 80.

சென்னையில் ஊரடங்கு சமயத்தில் மட்டும் 2000 குடும்ப வன்முறை புகார்கள் குவிந்துள்ளது.

முன்பெல்லாம் கணவனிடம் சண்டை வந்தால் பெற்றோர் வீட்டுக்கு சென்று சில நாட்கள் பெண்கள் அங்கே தஞ்சம் அடைய முடியும்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் இந்து கருணாகரன் கூறியதாவது…

இளைய தலைமுறையினரிடம் சகிப்புத்தன்மை குறைந்துள்ளது. மேலும் கணவன் மனைவி இடையே புரிதல் இல்லை. இதுவே இன்றைய தலைமுறை தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்த லாக் டவுனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வராது.” என தெரிவித்தார்.

Advocate Indhu talks about Domestic violence during lock down

More Articles
Follows