தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினாலும் பேசாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சு எப்போதும் மீடியா உலகில் இருந்துக் கொண்டே இருக்கும்.
அதுவும் இன்று ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய பேச்சு அரசியல் உலகில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடிகனாக இருக்கும் நான். நாளை கடவுளால் வேறு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதில் உண்மையாக இருப்பேன். நேர்மையாக செயல்படுவேன் என்றார்.
மேலும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், தற்போது அதுபற்றி பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.
இறுதியாக நான் அரசியலுக்கு வந்தால், ரசிகர்கள் என்றாலும் அவர்களுக்கு பணத்தாசை பிடித்திருந்தால் அவர்களை நெருங்க விட மாட்டேன் என மறைமுகமாக தன் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது…
ஊழலை எதிர்ப்பதாக ரஜினி குறிப்பிட்டு இருந்தார். அவரின் நிலைப்பாடும் பாஜகவின் கருத்தும் ஒன்றுதான்.
அவரது பேச்சின்மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார்.
நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து எனவும் தமிழிசை தெரிவித்தார்.
ரஜினியின் இந்த வாய்ஸ் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
Tamilisai Soundararajan opinion about Rajinikanth entry into Politics