தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் தமிழக அரசியல் களத்தில் நாங்கள் குதிப்போம் என்ற வகையில் ரஜினி, கமலும் இருவரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் கமல் அண்ணன் சாருஹாசன் இவர்களின் அரசியல் பயணம் குறித்து பிரபல டிவிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது…
மக்கள் விரும்பினால் முதல் அமைச்சர் ஆவேன் என யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.
மக்களை விரும்ப வைப்பேன் என யாராவது சொல்ல முடியுமா?
கமலை ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள்? நிச்சயம் அவர் அரசியலுக்கு வர காரணத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.
ரஜினியை தமிழக மக்கள் வணங்குகிறார்கள். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
ரஜினி மற்றும் கமல் இணைந்தால் 10% வாக்குகள் மட்டுமே பெறுவார்கள். மக்கள் அந்தளவு சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இல்லை. என்று தெரிவித்தார்.
Tamil peoples praying Rajini as God says Charuhassan