தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal teamதயாரிப்பாளர் சங்கத்தினுடைய தேர்தல் ஏப்ரல் 2 – இரண்டாம் தேதி உட்லண்ட்ஸ் ( Woodlands ) திரையரங்கில் நடைபெறவுள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதியும் தமிழ்த்திரைப்பட தேர்தல் அதிகாரியுமான திரு . ராஜேக்ஷ்வரன் அவர்கள் இன்று காலை 11மணி அளவில் filmchamber அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம்.

28.02.2017 -ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017.

ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை Wood lands திரையரங்கில் தேர்தல் நடைபெறும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விஷால் அணி சார்பாக பிரகாஷ் ராஜ் ,ஆர்.பார்த்திபன், K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் ,SR.பிரபு ,AL உதயா மற்றும் உடன் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டார் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன்

தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டார் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay and Director Arivazhaganஅருண் விஜய் – மஹிமா நம்பியார் நடிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் 23’. ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படத்தை, வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று ‘அக்கராஸ் பிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

“ஒரு தரமான மெடிக்கல் – கிரைம் – திரில்லர் திரைப்படத்தை நான் உருவாக்கி இருக்கின்றேன் என்று முழுமையாக நம்புகின்றேன். இந்த படத்தில் ஒரு வலுவான கருத்தையும் நான் உள்ளடக்கி இருக்கின்றேன்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை , இந்த ‘குற்றம் 23’ படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல் துறை அதிகாரியாக ரசிகர்கள் காண்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஒரு புதிய நட்சத்திர நாயகனின் உதயத்தை, ரசிகர்கள் விரைவில் உறுதி செய்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் அறிவழகன்.⁠⁠⁠⁠

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் – விஷால்

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal speechசிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் “ துப்பறிவாளன் “ திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா கலந்து கொண்டனர். இவர்களோடு ஆபர் தொண்டு நிர்வண தலைவி நடிகை பூங்கோதை கலந்துகொண்டார்.

தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இனைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். விஷால் மாணவர்களுக்கு காலணிகள் , நோட்டு புத்தகங்கள் , சீருடைகள் வழங்கிய பின் பேசினார். அவ்விழாவில் விஷால் பேசியது ;

ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்து தான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன். நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன்.

எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு. நான் இந்த கிராம மக்களுக்கு மட்டும்மல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும் , கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார்.

இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும். நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம் , நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன். என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும் என்றார் விஷால்.

அரவிந்த் சாமி – ரித்திகா சிங் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

அரவிந்த் சாமி – ரித்திகா சிங் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arvind Swamy Ritika Singh Simranமேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன் , ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் எக்கச்சக்க புகழ் பெற்ற நடிகர் நடிகை நடிப்பத்தால் படத்தின் வியாபாரம் இப்போதில் இருந்தே சூடுபிடித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு “ வணங்காமுடி “ என அனைவரும் கூறி வருகின்றனர் அது தவறான தகவலாகும். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் வெளிவரும்.

இப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி , கலை சிவா யாதவ்

விஜய்-அட்லி இணையும் படத்தில் முத்தான சென்டிமெண்ட்ஸ்

விஜய்-அட்லி இணையும் படத்தில் முத்தான சென்டிமெண்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay atleeதெறி கூட்டணி மீண்டும் விஜய் 61 படத்திற்காக இணைகிறது.விஜய்யின் நண்பன் படத்தில் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றினார் அட்லி.

அதன்படி பார்த்தால் விஜய்யுடன் 3வது முறையாக இணைகிறார்.சரி இந்த டைரக்டர் சென்டிமெண்ட்ஸ் தவிர விஜய்யுடன் 3வது முறை இணைபவர்கள் யார்..? என்பதை பார்ப்போம்.

நண்பன் மற்றும் தலைவா படத்தை தொடர்ந்து சத்யராஜும் 3வது முறை இணைகிறார்.இவர்களை அடுத்து எஸ்.ஜே.சூர்யா. குஷி, நண்பனை தொடர்ந்து 3வது முறை.சமந்தா இதற்கு முன் கத்தி, தெறியில் நடித்துள்ளார். எனவே இவருக்கும் 3வது முறை.

துப்பாக்கி, ஜில்லாவில் நடித்த காஜல் அகர்வாலுக்கும் இது 3வது முறை.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் 3வது முறையாக இணைந்துள்ளனர்.

உதயா மற்றும் அழகிய தமிழ்மகன் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ஆர்.இத்தனை முத்தான சென்டிமெண்ட்களை வைத்திருக்கும் விஜய் 61 நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கலாம்.

திருமலை, குஷி படத்தில் நடித்த் ஜோதிகா விலகாமல் இருந்திருந்தால் அவருக்கும் இது 3வது முறைதான்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and selva raghavanசூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கின்றார்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விரைவில் இதற்கான அறிவிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

More Articles
Follows