தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுசீந்திரன் இயக்கியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சுதீப் கிருஷ்ணா விக்ராந்த், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுசீந்திரன்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளதாவது…
“‘சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை.
விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். பதில் பின்னர் ஆசோசித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார்.
அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை.
எனக்கு எல்லாம் தீபாவளியும் மகிழ்ச்சியான தீபாவளிதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பார்த்தேன்.
என்று பதிலளித்தார்.
Suseenthiran revealed why he not directed Vijay Ajith Suriya movies