தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தன் முதல் வெற்றியை கொடுத்து சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுசீந்திரன்.
அதன்பின்னர் பல வெற்றிகளை கொடுத்தாலும் ஒரு சில படங்கள் கவனம் பெறவில்லை.
இறுதியாக வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றுவரை நான் யாரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை.
அசோக் அண்ணனின் மரணம் குறித்து நான் பேசியதால், அந்த பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் என்னுடன் படம் செய்யத் தயங்குகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
பந்து எவ்வளவு வேகமாக தரையில் எறியப்படுகிறதோ, அவ்வளவு வேகமாகப் பந்து மேலே எழும் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனது முதல் படத்திலேயே முழுவதும் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது தயாரிப்பாளர் என்று அனைத்துப் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன் தான், கடந்த 10 ஆண்டுகளில் (கர்வம் அல்ல).
இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.
எனது முதல் படம் ‘ஏஞ்சலினா’, இரண்டாவது படம் ‘ஜீனியஸ்’. இரண்டு படங்களும் நிறைவடைந்துள்ளன. எனது மூன்றாவது படம் ‘சாம்பியன்’, ஃபுட்பால் பற்றியது.
ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்தப் படத்தைத் தொடங்க உள்ளேன்.
மற்ற இரண்டு படங்களின் விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.