தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.
இமான் இசையமைத்திருந்த இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் நாயகி உள்ளிட்ட சில காட்சிகளை எடிட் செய்து ரீவெர்சனை ரிலீஸ் செய்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திடீரென தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு அதில் பேசியுள்ளார் சுசீந்திரன்.
அதில்… நெஞ்சில் துணிவிருந்தால்’ கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் டிசம்பர் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது.
இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது” என பேசியிருக்கிறார்.
Suseenthiran decided to stop screening of Nenjil Thunivirundhal