தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவைத் தாண்டியும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் சூர்யா.
பொது இடங்களிலும் அமைதியான அனுகுமுறையை இவர் கடைப்பிடிப்பவர்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த இவர் அங்குள்ள ரசிகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்ட வீடியோ இணையங்களில் வைராகியுள்ளது.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து நள்ளிரவு சூர்யா காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
இதனையறிந்த ரசிகர்கள் அவரை படு வேகத்தில் பைக்கில் தொடர்ந்து சென்றுள்ளனர்.
எனவே அங்கு தன் காரை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார். இப்படி படு வேகமாக வண்டி ஓட்டினால் என்னாவது? வேகம் ஆபத்து என பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.