தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஏப்ரல் மாதம் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டு இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுகுறித்த ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டமும் சென்னையில் நடைப்பெற்றது.
ஆனால் எல்லாம் ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுப்பது முடியாத காரியம் என்பதால் அப்போது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக வாட்ஸ் அப்பில் ரஜினிகாந்த் தன் குரலை பதிவு செய்திருந்தார்.
விரைவில் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் மே 15ஆம் முதல் 19ஆம் தேதி வரை (5 நாட்கள்) ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் சூப்பர் ஸ்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக ஒரு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், அந்த அட்டை வைத்திருந்தால் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Superstar Rajinikanth will meet his fans from 15th May 2017 onwards