தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில் :
“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.
நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விருதுக்கான விழா இந்திய தலைநகர் டெல்லியில் வருகிற மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.
மே 2ஆம் தேதி தான் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
எனவே இந்த மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்? என்ற முழுமையான தகவல்கள் மே 3க்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor #Rajinikanth, fondly known as Thalaiva by his fans, will receive the 51st #DadaSahebPhalke award, India’s highest film honour, on May 3, 2021.
He had also been honoured with the Padma Bhushan & Padma Vibhushan in the past.
@rajinikanth @MIB_India https://t.co/kCyrgLb358
Super Star Rajinikanth will receive the 51st #DadaSahebPhalke award, on May 3, 2021.