EXCLUSIVE ‘சிக்ஸர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் சதீஷ்.; முக்கிய கேரக்டரில் வெண்பா

EXCLUSIVE ‘சிக்ஸர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் சதீஷ்.; முக்கிய கேரக்டரில் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் வைபவ் & சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘சிக்ஸர்’.

இப்படத்தை இயக்கியவர் சச்சி. (இவரின் தங்கையை தான் நடிகர் சதீஷ் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

மாலை கண் நோயாளியாக வைபவ் நடித்திருந்தார். இந்த ‘சிக்ஸர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் தான் சச்சி & டாக்டர் சரண்யா திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இயக்குநர் சச்சி தனது அடுத்த படத்தை தற்போது இயக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்க முக்கிய கேரக்டரில் வெண்பா நடிக்கிறார்.

பிஜி. முத்தையா இப்படத்தை தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

Sixer director’s next with Actor Sathish

வடிவேலு கேரக்டரில் ஓவியா யோகிபாபு ஜோடியாகும் படம்.; ஜெயலலிதா & விஜய் மோதலுக்கு காரணமான வார்த்தையும் இருக்கே.!

வடிவேலு கேரக்டரில் ஓவியா யோகிபாபு ஜோடியாகும் படம்.; ஜெயலலிதா & விஜய் மோதலுக்கு காரணமான வார்த்தையும் இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் நடித்து இருந்தார் வடிவேலு.

தற்போது ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயரையே படத்தலைப்பாக்கி உள்ளனர்.

இதில் யோகிபாபு & ஓவியா இணைந்து நடித்துள்ளனர். ஸ்வதேஷ் இயக்குகிறார்.

இந்த படத்தின் தலைப்பின் கீழ் TIME TO LEAD என்றொரு வாசகம் உள்ளது.

விஜய் நடித்த தலைவா படத்திற்கும் இதே வாசகம் இருந்தது. அப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயம். அந்த வார்த்தை சர்ச்சையை உருவாக்க அதை நீக்கி விட்டு தலைவா படத்தை ரிலீஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu and Oviya joins for a new film

துரை இயக்கி தயாரிக்க சுந்தர் நடிப்பில் ‘தலைநகரம் 2’..; வடிவேலு இணைவாரா.?

துரை இயக்கி தயாரிக்க சுந்தர் நடிப்பில் ‘தலைநகரம் 2’..; வடிவேலு இணைவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V.Z.துரை – சுந்தர்.C கூட்டணியில் வெளியான இருட்டு வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் ‘தலைநகரம் 2’

இயக்குனர் V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் இப்படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இயக்குனர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி
வசனம் – மணிஜி
இணை தயாரிப்பு – RS வெங்கட், APV மாறன்

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தலைநகரம் படத்தின் முதல் பாக வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் வடிவேலு.

எனவே அவர் தலைநகரம் 2 படத்தில் அவர் இணைவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

VZ Durai and Sundar C joins for Thalai Nagaram 2

கிராம சபை நடத்தும் என் உரிமையில் அரசு தலையிட முடியாது.. – கமல்ஹாசன்

கிராம சபை நடத்தும் என் உரிமையில் அரசு தலையிட முடியாது.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உயிரே உறவே தமிழே!
வணக்கம்,

கிராம சபைகளைப் பொருத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.

கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையுமே தடுக்காத கொரோனா, கிராம சபை நடத்தப்படவேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடிவிடும்.

2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம். பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், ‘கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது’ என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழக அரசு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.

சுமார் 615 நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள்.

கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும்.

இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

பல கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த அனுபவங்களைக் கொண்டு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள்.

கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை நம் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும்.

நாளை நமதே!

கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்

MNM leader Kamal Haasan talks about Grama Sabha meeting

கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது ஆண்டு நினைவு நாளில் ‘சில்க்’ ஆரம்பம்

கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது ஆண்டு நினைவு நாளில் ‘சில்க்’ ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை அவர்களின் தயாரிப்பில் தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா, பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி, மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம், கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும் ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து 80களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவின் 25வது நினைவு நாளான இன்று “சில்க்” என பெயரிடப்பட்டு ஒரு திரைப்படம் தொடங்கப்பட்டிருக்கிறது.

முன்னணி கதாநாயகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க படத்தில் நாயகனுக்கு நான்கு ஜோடிகள் 4 நாயகிகளின் தேர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

வழக்கு எண் 18/9 தனி ஒருவன் திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இது ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

Silk Kickstarted today in the rememberance of 80’s dream girl SILK’s 25th death anniversary

ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட நடிகை

ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா.

அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார்.

பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். அக்கா போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்து இப்போது OTT மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள்.

திரைத்துறையிலிருந்து விலகிய பிறகு தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார்.

2012 க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Enga Ooru Paattukkaran heroine’s re entry in OTT platform

More Articles
Follows