தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 1991ல் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே கலக்கிய படம் சின்னத்தம்பி.
இதில் மாலை கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்திருப்பார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில்.. மாலை 6 மணிக்குள் தன் வீட்டிற்கு வந்துடுவார். அப்போது தன் தந்தை போட்டோவை பார்த்து…
டேய் தகப்பா.. ராத்திரியில என்ன பாவம் நீ செஞ்சியோ… எனக்கு 6 மணிக்கு மேல கண் தெரியல என்று திட்டுவார். ஆனா ஒன்னே ஒன்னுடா.. நான் கரண்ட் பில் கட்டணதேயில்லடா என்பார் கவுண்டமணி.
அதுபோல் இன்று வெளியாகும் சிக்ஸர் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி போட்டோவை வைத்து.. டேய் தாத்தா.. என குறிப்பிட்டு அதே டயலாக்கை வைத்து பட நாயகன் வைபவ் திட்டியிருப்பார்.
இந்த நிலையில் இன்று வெளியாகவுள்ள இந்த சிக்ஸர் படத்திற்கு கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்து இப்பட தயாரிப்பாளர்களான தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும், வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அந்த காட்சியை நீக்க வற்புறுத்தியுள்ளார்.
மேலும் மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் தெரிவித்துள்ளனர் கவுண்டமணி.
அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லால்வாணி, சதீஷ், ராதாரவி, இளவரசு, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Goundamani send Legal notice to Sixer team to remove controversy scene