தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரை டூ வெள்ளித்திரை வந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இவரது தந்தை காவல் துறை அதிகாரியாக பணி புரிந்தவர். அவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.
கடந்த 2003 – ம் ஆண்டு மறைந்த சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் பற்றி அவருடன் பணியாற்றிய உதவியாளர் சௌந்தரராஜன் என்பவர் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் சிவகார்த்தியின் அப்பா உயிரிழக்கும் கடைசி நிமிடத்தில் தான் மட்டுமே அவருடன் இருந்ததாகவும், அந்த நினைவுகளை மறக்க முடியாது என்றும் அவரது இறந்த நாளில் தெரிவித்துள்ளார்.
அதற்கு ட்விட்டரில் பதிலளித்த சிவகார்த்திகேயன்…
என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவருடன் பல வருடங்கள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டத்தை கிடைக்கப் பெறாதவன் எனவும் அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.