தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கஜா புயல் தாக்கியதால் நாகை, தஞ்சை, திருவாரூர், வேதாரணயம், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
நடிகர்கள் சிவகுமார், சூர்யா குடும்பம், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
மேலும் பல நடிகர்கள் தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக நிவாரண பொருட்களை அனுப்பி உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ மூலம் டெல்டா மக்களுக்கு உதவ செல்போன் நெட்வொர்க் மூலமாக உதவ புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது…
டெல்டா பகுதி மக்களுக்கு பலரும் நிவாரணங்களை அளித்து வருகின்றனர். ஆனால் அந்த தொகை சரியாக சென்று சேர்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
மேலும் சாமானியன் ஒரு பத்து ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், என்ன செய்வார்? இதற்கு ஒரு வழி இருக்கிறது. நாம் அனைவரும் செல்போன் உபயோகம் செய்கிறோம். காலர் டியூன் பயன்படுத்த அதற்கு பணம் கொடுக்கிறோம்.
செல்போன் நெட் ஒர்க் மூலமாக அனைவரும் பணம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அனைத்து நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட வேண்டும்.
யார் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற மொத்த பட்டியலையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். நாம் அனைவரும் இதற்காக கரம் கோர்க்க முடியும்.
இது சாத்தியம் என நினைத்து செயல்பட விரும்பினால், #UniteForHumanity, #UniteForDelta என்ற ஹேஷ்டேக்கில் இதைக் கொண்டு சேருங்கள். இறைவன் இருக்கிறான். நல்லதுதான் நடக்கும்.” என சிம்பு பேசியுள்ளார்.
Simbus new idea to help Delta people who affected by Gaja Cyclone