தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இப்போது மாடர்ன் வேர்ல்ட் என்ற பெயரில் சினிமாவில் பாதி பாடல்கள் குத்துப் பாடல்களாகவே வருகிறது.
ஆனால் சில பாடல்கள் மனதை உருக வைக்கும் மெலோடி பாடலாக வருகிறது.
இந்த மெலோடியில் நிச்சயம் பாடகி ஸ்ரேயா கோஷலின் குரல் ஒலித்திருக்கும்.
மிருதா.. மிருதா… மற்றும் உன் கண்ண காட்டு போதும் என்ற சமீபத்திய மெகா ஹிட் பாடல்கள் இவரின் குரலிலேயே ஒலித்தது.
இவர் நான்கு தேசிய விருதுகளையும், பத்து ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றவர்.
இந்நிலையில் விரைவில் இந்திய தலைநகர் டெல்லியில் மேடமி டுஸாட்ஸ்’ என்ற கிளை நிறுவப்படவுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் உள்ள பல பிரபலங்களின் மெழுகுச்சிலை காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.
இதில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட இருக்கிறதாம்.
இதுபோன்று, இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் மேடமி டுஸாட்ஸ்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது,
அங்கு பிரதமர் மோடி, அமிதாப்பச்சன் உள்ளிட்டவர்களின் மெழுகுச்சிலை உள்ளது.
லண்டன் மட்டுமின்றி உலகின் முன்னணி நகரங்களிலும் இதுபோன்ற கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.