காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தற்கொலை .. ரசிகர்கள் அதிர்ச்சி

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தற்கொலை .. ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காற்றுக்கென்ன வெளி’ சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்த் தொலைக்காட்சித் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் நடிகர் ஹரி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன, அவற்றில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’.

அதில் நடித்து வரும் ஹரி, பார்வையாளர்களுக்கு பரிச்சயமானவர், திடீரென அவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shocking! ‘Kaatrukkenna Veli’ serial actor dies by suicide

விஜய் படத்தை முடித்துவிட்டு முதன்முறையாக ரஜினியை இயக்கும் லோகேஷ்

விஜய் படத்தை முடித்துவிட்டு முதன்முறையாக ரஜினியை இயக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய 4 படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட்டாக்கி இவரை முன்னணி வரிசைக்கு கொண்டு வந்தது.

மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய 4 படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

‘லியோ’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

இந்தப் படத்திற்கு லோகேஷ் கனகராஜ்க்கு ரூ. 20 கோடிக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

லோகேஷின் கதை கருவுக்கு ரஜினியும் ஓகே சொல்லி விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Rajinikanth plans to act in lokesh direction

ஆம்பளையா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு.? எடப்பாடி மீது எகிறிய இயக்குனர் நவீன்

ஆம்பளையா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு.? எடப்பாடி மீது எகிறிய இயக்குனர் நவீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே காங்கிரஸ் அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது பிரச்சாரத்தில்.. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இத்துடன் வாக்காளர்களை திமுகவினரை அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

அது குறித்து பேசும்போது.. ‘ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்’ என கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான நவீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தில்.., ‘ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா?

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

Director Naveen voice against edappadi palanisamy

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் மாவீரனின் மெகா விருந்து

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் மாவீரனின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முதல் பாடலை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17ஆம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

மண்டேலா படம் போலவே அரசியல் சார்ந்த கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

‘மாவீரன்’ படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Mega treat on sivakarthikeyan’s birthday

புதுமுகத்தை நாயகனாக வைத்து படம் எடுக்க மாட்டாங்க..; ஃபீலிங்ஸ் பிரதீப்

புதுமுகத்தை நாயகனாக வைத்து படம் எடுக்க மாட்டாங்க..; ஃபீலிங்ஸ் பிரதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது…*

“ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வர மாட்டார்கள். ஆனால் AGS அதற்கு முன் வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு இந்தப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள். அதற்கு ஒட்டுமொத்த AGS குழுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்த படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசயை தந்தார். அடுத்ததாக எனது தொழில்நுட்பக்குழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும் நடிகர்களும் இந்தப் படத்தை மேம்படுத்தினார்கள்.

அதன் பிறகு மக்கள் கொடுத்த ஆதரவில் தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கொள்கிறேன்.” என்றார்.

லவ் டுடே

Pradeep emotional speech at Love Today 100 days success event

https://youtube.com/shorts/v_n7ol6V0Ic?feature=share

விஜய்க்கு பிறகு ஏஜிஎஸ்-க்கு பிரதீப் அமைத்து கொடுத்த வெற்றி மேடை

விஜய்க்கு பிறகு ஏஜிஎஸ்-க்கு பிரதீப் அமைத்து கொடுத்த வெற்றி மேடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை இவானா பேசியதாவது…*

“இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி விழா மேடையில் நான் இருப்பது என் வாழ்கையின் மிகமுக்கியமான தருணம்.

இயக்குநராகவும், நடிகராகவும் பிரதீப் ஒரு மிகச்சிறந்த மனிதர். இந்த படக்குழு கொடுத்த அரவணைப்பு எனது வாழ்கையின் மிகமுக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. என்னுடன் இந்த படத்தில் பணிபுரிந்தத அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.” என்றார்.

இவானா

*கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது…*

“பிகில் திரைப்படத்திற்கு பிறகு இந்த மேடை பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. லவ் டுடே கதையை கேட்கும் போதே நம்பிக்கையை கொடுக்க கூடிய வகையில் இருந்தது. அது தான் படத்தின் சிறப்பு என்று நினைக்கிறேன்.

கொரோனாவிற்கு பிறகு பல திரைப்படங்கள் வெளியாயின. லவ்டுடே போன்ற பெரிய ஹீரோ இல்லாத படத்தை எப்படி வெளியிட போகிறீர்கள் என்று பலர் கேட்ட போது, இயக்குநர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.”

லவ் டுடே

After Bigil we got success stage for Love Today says AGS team

More Articles
Follows