ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் இணையும் சிவராஜ்குமார்..

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் இணையும் சிவராஜ்குமார்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில்,ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார் தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சிவராஜ்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார், மேலும் அவரது பகுதிகளின் படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படம் 2023 கோடையில் பெரிய திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shivarajkumar joins Rajinikanth’s ‘Jailer’

LOVE TODAY ஹீரோவை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.; கடுப்பான பிரதீப் செய்த காரியம்!

LOVE TODAY ஹீரோவை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.; கடுப்பான பிரதீப் செய்த காரியம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் நாயகனாக நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ படம் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் முதல் திரையிலகினர் வரை படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பற்றி பிரதீப் தவறாக ஒரு பதிவிட்டதாக பதிவு வைரலானது.

இத்துடன் பல வருடங்களுக்கு முன் பிரதீப் சில பிரபலங்கள் பற்றி போட்ட பேஸ்புக் பதிவுகளை வைத்து அவரை சமூக வலைத்தளங்களில் ‘டிரோல்’ செய்து வந்தனர்.

எனவே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தையே நீக்கிவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில்…

“இணையத்தில் சுற்றி வரும் பதிவுகள் போட்டோஷாப் எடிட்டிங் செய்யப்பட்டவை.

பதிவுகளில் ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துட்டேன்.

மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

என்னுடைய சில பதிவுகள் உண்மையானவைதான். ஆனால், கடுமையான வார்த்தைகள் கொண்டவை போலியானவை.

ஒரு கட்டத்தில் நானும் தவறு செய்துள்ளேன். வயதுக்கு ஏற்ப நாமும் மாறுவோம், கற்றுக் கொள்வோம்,

இப்போது ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக முயற்சி செய்கிறேன்,” என விளக்கம் கொடுத்துள்ளார் இந்த உத்தம பிரதீப்.

எனக்கு பிடித்த நடிகர் ரஜினி.. – சன்னி லியோன்.; ரசிகரை மிரட்டிய மேனேஜர்

எனக்கு பிடித்த நடிகர் ரஜினி.. – சன்னி லியோன்.; ரசிகரை மிரட்டிய மேனேஜர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகப் புகழ் பெற்றவர் மாடல் நடிகை சன்னி லியோன்.

இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் சேலை அணிந்து கலந்து கொண்டார்.

அப்போது நடிகர் சதீஷ்.. “சன்னி லியோனே சேலையில் வந்தாலும் தர்ஷா குப்தா கிளாமராக வந்துள்ளார் என்று பேசி இருந்தார். அது அப்போது சர்ச்சையானது.

இந்த நிலையில் நேற்று ‘தீ இவன்’ என்ற படத்திற்காக சென்னை வந்திருந்தார்.

சன்னி லியோன் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். டான்ஸ் மற்றும் இதர செலவுகள் என சேர்த்து ஒரு கோடி வரை சன்னிலியோனுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் சன்னி லியோனிடம் “தங்களுக்கு பிடித்தமான இந்திய நடிகர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது? எனக்கு பிடித்த ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் சன்னி லியோனிடம் செஃல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை அவரது மேனேஜர் மிரட்டியது சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி பட்ஜெட் படத்திற்கு தளபதி விஜயை தேர்வு செய்த ஷங்கர்?

1000 கோடி பட்ஜெட் படத்திற்கு தளபதி விஜயை தேர்வு செய்த ஷங்கர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கரின் கனவு படமான வேள்பாரியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஷங்கரின் முதல் விருப்பம் விஜய் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் பல மாதங்களுக்கு முன்பு கதையைக் கேட்டு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

ஷங்கர் இதை சன் பிக்சர்ஸிடம் ஒப்படைத்தார், ஆனால் அந்த நேரத்தில் அது மேலும் நகரவில்லை.

இப்போது அவர் ஒரு புதிய தயாரிப்பாளருடன் விஜய்யை அணுகியபோது, ​​​​தளபதி 67 மற்றும் ‘தளபதி 68’ இல் கமிட் ஆகியுள்ளதால் தேதிகளை வழங்க முடியவில்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜாதிகளே இல்லாத மதத்திற்கு மாறிய ‘ரியல் ஹீரோ’ வில்லன் நடிகர் சாய்தீனா

ஜாதிகளே இல்லாத மதத்திற்கு மாறிய ‘ரியல் ஹீரோ’ வில்லன் நடிகர் சாய்தீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் சாய் தீனா.

படங்களில் டெரர் வில்லனாக நடித்தாலும் இவர் பல சமூகப் பணிகளை செய்து வருகிறார்.

மேலும் பொது மேடைகளிலும் மற்றும் பேட்டிகளிலும் இவர் பேசும் பேச்சுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் விளம்பரப் பலகை கலைஞராகத்தான் மீடியாவிற்கு நுழைந்தார். அதற்குப்பின் இவர் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதிலும் கமலஹாசனின் ‘விருமாண்டி’ திரைப்படத்தில் சிறை வார்டானாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், எதற்கும் துணிந்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல பிடித்தவன், ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.

தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு இவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். படத்தில் தான் இவர் வில்லனே தவிர நிஜத்தில் இவர் உண்மையான ஹீரோ என்று சொல்லலாம்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சாய் தீனா குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். புத்த துறவி மௌரிய முன்னிலையில் புத்த மதத்தை தழுவதற்காக 22 விதிகளை சொல்லி நடிகர் தீனா புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார்.

இது குறித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தது…

” நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்து வருடமாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன்.

நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான்.

இந்தியாவில் 3 மதங்கள் தான் இருக்கிறது என்று சொல்வது தவறான ஒன்று. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை. என்னை பொறுத்தவரை ஜாதிகள் என்பது ஜாதி ஒரு சாக்கடை, குப்பை..” என்றார்.

Actor Sai Deena converts to Buddhism with family

‘நான் மிருகமாய் மாற’ படத்தில் எல்லாமே புதுசு.. – சசிகுமார்

‘நான் மிருகமாய் மாற’ படத்தில் எல்லாமே புதுசு.. – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா இணைந்துள்ள படம் ‘நான் மிருகமாய் மாற’.

இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேசுகையில்…

*காமன் மேன்* என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு *நான் மிருகமாய் மாற* என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன்.

இந்த படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.

“படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு” என்று தன் பாணியில் உரையை முடித்தார்.

இவருக்கு அடுத்த வாரம் *காரி* என்ற படம் வெளியாக உள்ளது என்பதனையும் தெரிவித்தார் சசிகுமார்.

Sasi kumar speech at Naan Mirugamaai Maara press meet

More Articles
Follows