தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு என்றாலே அது வம்பாய் முடியும் என்பது போல சர்ச்சைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டாய் இருக்கின்றன.
அவர் நடித்து முடித்த படங்கள் என்றாலும், நடித்து வரும் படங்கள் என்றாலும் அது பிரச்சினையாகவே முடிகின்றன.
இதனிடையில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் சிம்புவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
எனவே நிறுத்தி வைக்கப்பட்ட கான் படத்தை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சிம்பு.
செல்வராகவன் தற்போது கௌதம் மேனன் தயாரிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் எஸ். ஜே. சூர்யா, ரெஜினி, நந்திதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
எனவே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை முடித்துவிட்டு மறக்காமல் கான் படத்தை இருவரும் கையில் எடுப்பார்கள் என கூறப்படுகிறது.