தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்திலிருந்து, மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும் கவிஞர் வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார்.
இருவரும் சினிமாவில் 30 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
தற்போது முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதவில்லை.
இந்த திரைப்படத்தில் இளங்கோ கிருஷ்ணன், வெண்பா, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து மணிரத்னத்திடம் கேள்வி கேட்டபோது…
வைரமுத்துவை விட தமிழ் சினிமாவில் திறமையான புதிய பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்து இருந்தார்.
இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது…
புதியவர்கள் வருவர் போவர் ஆனால்
நீங்க பீஷ்மர் #ManiRatnam sir
நீங்கள்
நட்டது விதை விருச்சமாகும்,
புதிய கவிஞருக்கு
வாழ்த்துகள்
ஆனால்
“வைரமுத்துவை
விட என
நீங்கள் திறமை சிறுமை செய்தது கோவலன் கொலை தடுமாற்ற சொற்கள்.
உங்கள் ‘இருவர்’ காலம் கண் மை அல்ல
தடம்..
@Vairamuthu @arrahman
என பதிவிட்டுள்ளார்.
Seenu Ramasamy condemn Maniratnam speech about Vairamuthu