தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரை தொடர்ந்து இன்று சீமானை சந்தித்தார் கமல்ஹாசன்.
இதுநாள் வரை அவர்களின் இல்லம் தேடி கமல் சென்றார். ஆனால் இந்த முறை கமல் வருவது நல்லதல்ல. நானே வருகிறேன் என சீமான் கமலை சந்திக்க வந்தார்.
அதன்பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசியதாவது…
அப்போது சீமான் கூறியதாவது:-
படிக்கும் காலத்தில் இருந்தே நான் கமலின் ரசிகன்.
நானும் கமலும் ஒரே பூமி, ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள்.
அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாளை பயணத்தை தொடங்குகிறார்.
கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.
மண்ணின் மைந்தர் கமலுக்குதான் முன்னிரிமை.
நானும் கமலும் இணைந்து செயல்படுவோமா, இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.” இவ்வாறு அவர் கூறினார்.
கமல் கூறும்போது…
‘என்னுடைய கொள்கை சீமானுக்கு தெரியாது. எனது சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியம். நாளை எனது கொள்கைகளை அறிவித்த பின் சீமான் தனது நிலைப்பாட்டை கூறுவார்’ என்றார் கமல்.