பாஸர் இயக்கிய ‘ரூல் நம்பர் 4’ சொல்லும் ஏடிஎம் கொள்ளை கதை

பாஸர் இயக்கிய ‘ரூல் நம்பர் 4’ சொல்லும் ஏடிஎம் கொள்ளை கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரூல் நம்பர் 4 – (Rule Number 4)

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் ( YSIMY Productions ) தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.’

பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா (AK Pratheesh Krishna) நாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka) கதாநாயகியாக நடிக்கிறார்.

அவர்களுடன் மோகன் வைத்யா (Mohan vidhya ), ஜீவா ரவி(Jeeva Ravi), கலா கல்யாணி (Kala Kalyani ), பிர்லா போஸ்(Birla Bose), கலா பிரதீப்(Kala Pradeep ) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற நாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது.

அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான நாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள்.

அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதை அதிரடியான திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

ரூல் நம்பர் 4

காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா (Kevin D costa) இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ரூல் நம்பர் 4 (Rule Number 4 ) வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படக்குழு:..

டேவிட் ஜான் (David John ) ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீரஜ் சுகுமாறன் (Dheeraj Sukumaran ) பின்னணி இசையமைத்துள்ளார்.

எஸ்.பி.அஹமது ( S P Ahmed ) எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, நடன இயக்குர் பொறுப்பை அஜய் காளிமுத்து (Ajay Kalimuthu ) ஏற்றுள்ளார்.

சண்டைக் காட்சிகளை ராக் பிரபு (Rock Prabhu) வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை பா.சிவக்குமார் (P.SIVAKUMAR) கவனிக்கிறார்.
தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z)
இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை (Kumara Pillai, Kiran Meleveetil, Devarajan Pillai)
நவம்பர் 3 முதல் தமிழகமெங்கும் படம் வெளிவருகிறது.

ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution) படத்தை வெளியிடுகிறார்.

ரூல் நம்பர் 4

Rule Number 4 movie about ATM theft thriller

என்னால முடியல.; சினிமாவை விட்டு விலகும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

என்னால முடியல.; சினிமாவை விட்டு விலகும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2013 ஆம் ஆண்டில் வெளியான ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2015ல் ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கி இந்திய சினிமா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

இதில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பல சாதனைகளை மலையாளத்தில் படைத்தது. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனையடுத்து அல்போன்ஸ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அதன் பின்னர் அவியல் என்ற ஆந்தாலஜியை இயக்கியிருந்தார் அல்போன்ஸ்.

கடந்த ஆண்டு 2022 பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்டு’ படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது இவரது இயக்கத்தில் கிப்ட் என்ற படம் உருவாகி வருகிறது.

இந்த பத்து ஆண்டுகளில் நான்கு ஐந்து படம் படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் அல்பான சுபத்திரன்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுவார். எப்போதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் இவர்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

“எனக்கு சிறு வயது முதலே ஆட்டிசம் குறைபாடு உள்ளது. அதை இப்போது முழுமையாக உணர்ந்துள்ளேன். இனிமே என்றால் முடியல.

எனவே படங்களை இயக்குவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன். இனிமேல் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆனால் ஆல்பம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவேன்.” என உருக்கமான பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Director Alphonse Puthiran quits cinema

‘சீயான் 62’ குட்டிக் கதை சொல்லி ட்விஸ்ட் வைத்த ‘சித்தா’ இயக்குநர்

‘சீயான் 62’ குட்டிக் கதை சொல்லி ட்விஸ்ட் வைத்த ‘சித்தா’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இயக்குநர் S.U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Chiyaan 62 movie announcement video goes viral

SHAME LESS SATHYA JOTHI தனுஷ் ரசிகர்கள் செய்த டிரென்டிங்.; ஏன்.?

SHAME LESS SATHYA JOTHI தனுஷ் ரசிகர்கள் செய்த டிரென்டிங்.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

ஜி வி பிரகாஷ் இசையமைக்க இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் தனுஷ் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சிவராஜ்குமார், விநாயகன், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதா சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது்

ஆனால் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் எந்த அப்டேட்டையும் படக்குழு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 29ஆம் தேதி SHAME LESS SATHYA JOTHI என்ற ஹாஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுக்க அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush fans trending shameless Sathyajothi

தல பொங்கலை தொடர்ந்து இந்தாண்டிலேயே தல தீபாவளி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

தல பொங்கலை தொடர்ந்து இந்தாண்டிலேயே தல தீபாவளி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் அஜித் நடித்த ‘துணிவு’ படமும் வெளியானது.

இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது.

விஜய் – அஜித் ஆகிய இரு முன்னணி நடிகர்கள் படங்கள் ஒரே தினத்தில் வெளியானதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு 2022 தீபாவளிக்கு ‘துணிவு’ படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே ஒரே ஆண்டில் தல பொங்கலை தியேட்டரிலும் தல தீபாவளியை தொலைக்காட்சியிலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith fans will celebrate Thala Diwali 2022

என்னுடன் சிறுத்தை ஒட்டிக் கொண்டது… எனவே கார்த்தி ஸ்பெஷலானவர்… – சிவா

என்னுடன் சிறுத்தை ஒட்டிக் கொண்டது… எனவே கார்த்தி ஸ்பெஷலானவர்… – சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது…

“என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார்.

அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் பேசும்போத….

“என்னை கார்த்தியிடம் சிவக்குமார் சார் அறிமுகப்படுத்திபோது அவர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையில் இருந்தார். அவருக்கு எப்படி நான் பயிற்சி கொடுக்க போகிறேன் என்பது அப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், சூர்யா சாரிடம் இருந்து கிடைத்த உற்சாகப்படுத்தலும் கூடுதல் கருவிகளாக அமைந்து விட்டன” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது…

‘கார்த்தி சாருடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய கடின உழைப்பு எப்போதுமே எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. அவருடைய முதல் டைரக்ஷனை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது புரட்சித்தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விலைமதிக்க முடியாத பரிசாக ஆயிரம் முத்தங்களை கார்த்திக்கு வழங்கியிருப்பார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.. பொன்னியின் செல்வன் அவருக்கு கனவு திரைப்படமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. அப்படி இருந்திருந்தால் அவரது கனவு கதாபாத்திரத்தை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்று கூறினார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது….

‘கார்த்தியின் 25வது பட விழாவான இந்த அழகிய நிகழ்வில் இங்கே இடம்பெற்று இருப்பது மிகச்சிறப்பான ஒன்று. கார்த்திக்கும் இயக்குனர் ராஜூ முருகனுக்கும் ஜப்பான் போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கமர்சியலாக மட்டுமல்லாமல் கலை சார்ந்த படைப்புகளிலும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய ஒரு விதிவிலக்கான நடிகர் கார்த்தி. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே உற்சாகமானதாக இருந்தது. சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்காக நிறைய உதவிகளை செய்து சமூக கடமை ஆற்றி வருகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

Siruthai title stick to my name by Karthi says Siva

More Articles
Follows