விஜய்க்காக காத்திருக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

விஜய்க்காக காத்திருக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay glassரத்தின சிவா இயக்கத்தில் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் றெக்க.

இதில் விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இதுபோன்ற ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் கதையை ஒன்றை எழுதி வருகிறாராம் ரத்தினசிவா.

ஸ்கிரிப்ட் ஒர்க் நிறைவு பெற்றவுடன் விஜய்யை சந்தித்து கதை கூறவிருக்கிறாராம்.

மேலும் நடிகர் ராகவா லாரன்சுக்காக மற்றொரு கதையை தயார் செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

‘சிவகார்த்திகேயன் சிக்கல் எனக்கும் வந்தது…‘ விஷால் விளாசல்

‘சிவகார்த்திகேயன் சிக்கல் எனக்கும் வந்தது…‘ விஷால் விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதன்னுடைய படங்களுக்கு சிலர் பிரச்சினை செய்வதாக கூறிய சிவகார்த்திகேயன் ரெமோ பட விழாவில் அழுதார்.

எனவே இவருக்கு ஆதரவாக சிம்பு குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த புகார் குறித்து காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியதாவது…

சிவகார்த்திகேயன் போல் நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன்.

சிவகார்த்திகேயன் அளித்த புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது இருக்கும் ஊழல் புகார் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் மெரினா இயக்குனருடன் இணைவாரா சிவகார்த்திகேயன்?

மீண்டும் மெரினா இயக்குனருடன் இணைவாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyan photosகேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

இதில் ஜிவி. பிரகாஷ் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதையை தயாராக வைத்திருக்கிறாராம்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் கால்ஷீட் 24ஏஎம் ஸ்டூடியோஸ் கைவசம் உள்ளது.

இதனிடையில் சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால் பாண்டிராஜீடன் இணைய வாய்ப்பிருக்கிறது.

மெரினா படம் மூலம் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி மோதலுக்கு தயாராகும் ‘பைரவா-சிங்கம் 3’

தீபாவளி மோதலுக்கு தயாராகும் ‘பைரவா-சிங்கம் 3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 movie and bairavaaவிஜய் நடித்து வரும் பைரவா படம் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது.

இப்படம் 2017 பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை தவிர இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இவ்வருட (2016) தீபாவளியன்று வெளியிடவிருக்கிறார்களாம்.

அதாவது அக்டோபர் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் டீசரையும் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கும் 12.00 மணிக்கு வெளியாக உள்ளதாம்.

விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதியின் அக்கா

விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதியின் அக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rekka sija roseபரதன் இயக்கும் விஜய்யின் பைரவா படத்தில் ஒரு நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ் உள்ளிட்ட 3 நாயகிகள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு கேரளா நாயகியான சிஜா ரோஸ் என்பவரும் இணைந்துள்ளார்.

இவர் றெக்க படத்தில் விஜய்சேதுபதியுடன் மாலா அக்கா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் அழ இதான் உண்மையான காரணமா?

சிவகார்த்திகேயன் அழ இதான் உண்மையான காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan cry at remo meetரெமோ படத்தின் நன்றி விழா சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீல் மல்க உருக்கமாக பேசினார்.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

சிவகார்த்திகேயன் அழுத காரணம் அறிய விசாரித்தேன்.

‘வேந்தர் பிலிம்ஸ்’ மதன் மற்றும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ மதன், இருவரும் சிவகார்த்திகேயனிடம் புதுப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து இருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் சிவாவோ இருவரிடம் இருந்து அட்வான்ஸ் பணம் வாங்கவில்லை’ என்று மறுக்கிறார்.

ஆனால், ‘எஸ்கேப்’ ஆரிட்டிஸ்ட் மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கின்றார்.

இரண்டு பேரையும் நேரிடையாக அழைத்து வைத்து பேசினால்தான் உண்மை நிலை தெரியவரும்.

இந்த மன உளைச்சல் காரணமாக சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சிலரோ, சில நடிகர்கள்தான் காரணம் என்கின்றனர்.

ஆயிரம் பேர் பேசினாலும் சிவகார்த்திகேயனே சொன்னால்  மட்டுமே இதற்கான விடை கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

More Articles
Follows