விஜய்சேதுபதிக்கு நோ; சூர்யாவுக்கு எஸ் சொன்ன பிரபல நடிகை

விஜய்சேதுபதிக்கு நோ; சூர்யாவுக்கு எஸ் சொன்ன பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya vijay sethupathiதர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் விஜய்சேதுபதி.

விரைவில் இவரது நடிப்பில் ‘மெல்லிசை’ மற்றும் ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இமான் இசையமைக்க, இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தில் நடிக்க முடியாமல் போன கீர்த்தி, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கமல் ரசிகர்கள் மீது ஏன் கம்ப்ளைண்ட் பண்ணல..?’ சிவகார்த்திகேயன் விளக்கம்

‘கமல் ரசிகர்கள் மீது ஏன் கம்ப்ளைண்ட் பண்ணல..?’ சிவகார்த்திகேயன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal sivakarthikeyan hanshikaகடந்த வருடம் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன், ஹன்சிகா மற்றும் சிவகார்த்திகேயன் மதுரை சென்றனர்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

தாக்கியவர்கள் கமல் ரசிகர்கள் என அப்போது சொல்லப்பட்டது.

இந்நிலையில், நேற்று தந்தி டிவியின் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அப்போது அந்த தாக்குதல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது…

“என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்திருந்தால் அவர்களை போலீசார் அரெஸ்ட் செய்திருப்பார்கள்.

இதனால் அவர்களது வாழ்க்கையும் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கும்.

அதனால்தான் நான் கம்ப்ளைண்ட் பண்ணல.” என்றார்.

‘விஜய்க்கு ஜோடியாக ஆசை… ஆனா ‘பைரவா’வில் கிடைச்சது இதுதான்’ – சிஜா ரோஸ்

‘விஜய்க்கு ஜோடியாக ஆசை… ஆனா ‘பைரவா’வில் கிடைச்சது இதுதான்’ – சிஜா ரோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sija roseகோழி கூவுது, மாசாணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தாலும் றெக்க படம்தான் சிஜா ரோஸ்க்கு நல்ல முகவரியை கொடுத்துள்ளது.

இதில் விஜய்சேதுபதியுடன் மாலா அக்கா கேரக்டரில் அருமையாக நடித்திருந்தார்.

தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் ஹரீஷ் உத்தமன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது….

“விஜய் சாருடன் ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்பது என் கனவு.

ஆனால் தற்போது அவர் படத்தில் நான் இருக்கிறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.

என் கேரக்டர் பற்றி இப்போ சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முக்கியமான கேரக்டர் இது.

மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. எனவே, விரைவில் ஒரு படம் இயக்குவேன்” என்கிறார் இந்த மாலா அக்கா.

தனுஷ்-கார்த்தியுடன் மோதும் நதியா-மா.கா.பா. ஆனந்த்

தனுஷ்-கார்த்தியுடன் மோதும் நதியா-மா.கா.பா. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nathiya makapa anandhவருகிற 2016 தீபாவளிக்கு பல படங்களில் போட்டியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தனுஷ் நடித்துள்ள கொடி மற்றும் கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது, மேலும் இரு படங்கள் களத்தில் குதிக்கின்றன.

மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய “திரைக்கு வராத கதை” படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஆண்களே நடிக்காத இப்படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவைசரளா, ஆர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

இத்துடன் மாகாபா. ஆனந்த் நடித்துள்ள கடலை படமும் வெளியாகிறது.

சகாய சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்பாபு, பொன்வண்ணன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

nathiya

 

????????????????????

சூர்யா பட தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்-ஆனந்த் சங்கர்

சூர்யா பட தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்-ஆனந்த் சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram anandh sankarசூர்யாவின் சிங்கம், கார்த்தியின் பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.

இவர் தற்போது, விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பெரும் வெற்றிப் பெற்ற ஹாலிவுட் படமான ‘டோன்ட் ப்ரீத்’ படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் படத்தில் சந்தானம் ஜோடியாக சாய்பல்லவி

பிரபல இயக்குனர் படத்தில் சந்தானம் ஜோடியாக சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam sai pallaviபிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் சேர்த்து வளைத்து போட்டவர் சாய்பல்லவி.

எனவே, இந்த மலர் டீச்சர் தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானத்துடன் சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

ஓரிரு தினங்களுக்கு முன், விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சந்தானம்.

மேலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் செல்வராகவன் பிஸியாக உள்ளார்.

இவர்கள் இருவரும் இப்படங்களை முடித்துவிட்டு இணையக்கூடும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows