தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
இதில் நாயகியாக முதலில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து விலகினார்.
தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் இதில் நாயகியாக இணைந்துள்ளார்.
இந்த நிலையில் த்ரிஷா ஏன் விலகினார்? என்ற சீக்ரெட்டை உடைத்துள்ளார் சிரஞ்சீவி.
“மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா மொத்தமாக கால்ஷீட் கொடுத்து விட்டதால் ‘ஆச்சார்யா’ படத்திலிருந்து விலகி விட்டார்.
மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை” என கூறியுள்ளார் சிரஞ்சீவி.