தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் பிரபலமான அப்பா – மகன் நட்சத்திரங்கள் என்று சொன்னால் அது சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரை சொல்லலாம்.
சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்த ‘ஆச்சார்யா’ படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இயக்கி இருந்தார். ராம்சரண் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.
தந்தை, மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் படம் வெளியான முதல் நாள் முதலே மோசமான விமர்சனங்கள் வந்தன. எனவே படமும் படுதோல்வியை தழுவியது.
இதனால் இந்த நஷ்ட ஈட்டை சரி கட்ட வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கினர். பெரும்பாலான விநியோகஸ்தர்கள் படம் படுதோல்வியை தழுவியதால் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி ஒரு விழாவில் கலந்து கொண்ட போது ஆச்சார்யா நஷ்ட ஈடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சிரஞ்சீவி பதிலளிக்கும்போது.. ”ஆச்சார்யா படம் நஷ்டம் ஆணதால் நானும், ராம்சரணும் 80% பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். படம் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.