‘ஆச்சார்யா’ அட்டர் ப்ளாப்.: 80% பணத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி – ராம்சரண்

‘ஆச்சார்யா’ அட்டர் ப்ளாப்.: 80% பணத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி – ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான அப்பா – மகன் நட்சத்திரங்கள் என்று சொன்னால் அது சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரை சொல்லலாம்.

சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்த ‘ஆச்சார்யா’ படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இயக்கி இருந்தார். ராம்சரண் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.

தந்தை, மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படம் வெளியான முதல் நாள் முதலே மோசமான விமர்சனங்கள் வந்தன. எனவே படமும் படுதோல்வியை தழுவியது.

இதனால் இந்த நஷ்ட ஈட்டை சரி கட்ட வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கினர். பெரும்பாலான விநியோகஸ்தர்கள் படம் படுதோல்வியை தழுவியதால் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி ஒரு விழாவில் கலந்து கொண்ட போது ஆச்சார்யா நஷ்ட ஈடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிரஞ்சீவி பதிலளிக்கும்போது.. ”ஆச்சார்யா படம் நஷ்டம் ஆணதால் நானும், ராம்சரணும் 80% பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். படம் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

விஜய் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும் தோனி

விஜய் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும் தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எப்போதுமே விளம்பர படங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் உண்டு.

சச்சின், டோனி, விராட் கோலி ஆகிய பல கிரிக்கெட் முன்னணி வீரர்களும் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

அது போல ஹர்பஜன்சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் வெளியான பிரண்ட்ஷிப் கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தோனி production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படங்களை தயாரிக்க உள்ளார் மகேந்திர சிங் டோனி.

இவர் விஜய்யின் 70 வது படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்திகளை நாம் ஏற்கனவே FILMISTREET பார்த்தோம்.

இந்த நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்க உள்ள புதிய படத்தையும் தோனி தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

முதன்முறையாக இணையும் விஜய்சேதுபதி – வடிவேலு கூட்டணி

முதன்முறையாக இணையும் விஜய்சேதுபதி – வடிவேலு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆறுமுககுமார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி & கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார் ஆறுமுக குமார்.

இதில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் இணைகிறார் வடிவேலு.

தற்போது வடிவேலு கைவசம்.. ‘மாமன்னன்’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘சந்திரமுகி 2’, உள்ளிட்ட படங்கள் உள்ளன.

அதுபோல விஜய் சேதுபதி கைவசம் ‘ஜவான்’, ‘காந்தி டாக்ஸ்’ உள்ளிட்ட ஹிந்தி படங்கள் உள்ளன.

இருவரும் தங்களது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைந்து பணி புரிவார்கள் என தகவல்கள் வந்துள்ளன.

இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.

அழகான பெண் குழந்தைக்கு அப்பாவான ‘சலூன்’ பட இயக்குனர்

அழகான பெண் குழந்தைக்கு அப்பாவான ‘சலூன்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி பாபு நடித்த ‘தர்மபிரபு’, விமல் – வரலட்சுமி நடித்த ‘கன்னிராசி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்துக்குமரன்.

இவருக்கும் யோகேஸ்வரி தம்பதிக்கும் அக்டோபர் 13 நேற்று இரவு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.

தற்போது மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சலூன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் முத்துக்குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஃபார்முலா ரிப்பீட் : புதுவையில் ரஜினி.; நெல்சனுக்கு நெருக்கடி.; ‘ஜெயிலர்’-க்கே போலீஸ் பாதுகாப்பு

பாண்டியன் ஃபார்முலா ரிப்பீட் : புதுவையில் ரஜினி.; நெல்சனுக்கு நெருக்கடி.; ‘ஜெயிலர்’-க்கே போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த வரும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், குட்டி ரித்விக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஆகஸ்ட்டில் இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்ற வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஷூட்டிங்கில் சில காட்சிகள் லீக்கானது.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் ‘ஜெயிலர்’ சூட்டிங் நடந்து வருகிறது. புதுவைக்கு அருகே அழகியநத்தம் கிராமத்தில் நடந்து வருகிறது.

ரஜினி பட சூட்டிங் நடப்பதை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதுச்சேரி காவல்துறை மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

1990களில் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் பட சூட்டிங்பை பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளில் நடத்தினார் எஸ்.பி. முத்துராமன். அங்கு வில்லனை ரஜினிகாந்த் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது .

அப்போது ரஜினியை பார்க்க ஆயிரம் கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இந்த சம்பவம் அப்போதே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோ – அரேபிய கூட்டணியில் மஞ்சு வாரியர்.; 70% வெளிநாட்டினர் நடித்த படம்

இந்தோ – அரேபிய கூட்டணியில் மஞ்சு வாரியர்.; 70% வெளிநாட்டினர் நடித்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.

பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது.

இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.

மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை. பிரபல நடிகரும் ,இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி. அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.

‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார்.

விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்தோ -அரேபிய கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.

இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manju warriors starrer Indo Arabian movie Aayisha

More Articles
Follows