தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நானும் ரௌடிதான் படத்தில் இணைந்த நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் இன்றுவரை நிஜத்திலும் இணைந்தே வலம் வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ்சிவன் தற்போது இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்தார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்னேஷ்சிவன் பிரதர் பிரதர் என அழுத்தமாக பல முறை அழைத்தார் கீர்த்தி.
அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவனோ… கீர்த்தி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் எனக்கு சிஸ்டர்தான். நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்கள் என உறுதியளிக்கும் விதமாக பேசினார்.
இதனால் திரை பின்னணியில் ஏதோ நடந்துள்ளது என அங்கிருந்த அனைவரும் பேசிக் கொண்டனர்.
இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷிடம் விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஓவராக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான நயன்தாரா சம்பந்தபட்ட இருவரையும் கண்டித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுக்கிறது.
இதனால்தான் மேடையில் இருவரும் பாசமலர் அண்ணன் தங்கையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
பிரபுதேவா, சிம்பு ஆகிய இருவரின் காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா தற்போது விக்னேஷ்சிவனுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.