தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படம் வசூல் வேட்டையாடியது.
இது வெளியாகி இன்றோடு மூன்றாண்டுகளை கடந்துள்ளது.
இதுகுறித்து பட இயக்குனர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…
மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை.
நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கவுள்ளார் ரவிக்குமார்.
24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க, கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.