தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் ராஜு மகாலிங்கம்.
தற்போது அவர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் இணைய தன் பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.
அவருக்குப் பதிலாக கருணாமூர்த்தி பணிபுரிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியோடு இணைந்திருப்பது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியதாவது…
ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியின்பால் ஈர்த்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினி கட்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், முதல் நபராக பிரபலமான ஒருவர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.