JUST IN தாதா சாகேப் பால்கே விருது : நண்பன் அண்ணன் குரு ரசிகன் முதல் எவரையும் மறக்காமல் நன்றி சொன்ன ரஜினி

JUST IN தாதா சாகேப் பால்கே விருது : நண்பன் அண்ணன் குரு ரசிகன் முதல் எவரையும் மறக்காமல் நன்றி சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது..”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

“முதன் முதலில் தன் நடிப்பு திறமையை கண்டு பிடித்த பஸ் டிரைவர் நண்பன் ராஜ்பகதூர், தன் அண்ணன் சத்தியநாராயணன், குரு கே பாலசந்தர், தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய ரசிகர்கள் முதல் எவரையும் மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்த்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த அறிக்கை….

Rajinikanth’s heart felt tweet on #DadasahebPhalkeAward

Ex35fXqVcAEg6ZQ

உபி முதல்வர் யோகி கோவை வருகை..: இஸ்லாமியர் கடைகளை அடைக்க சொல்லி பாஜக வன்முறை..; கமல் கண்டனம்

உபி முதல்வர் யோகி கோவை வருகை..: இஸ்லாமியர் கடைகளை அடைக்க சொல்லி பாஜக வன்முறை..; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் படி ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினர் செய்த அடாவடிகள் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின.

இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டித்திருந்தார்.

“கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்” என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் கலவரக்காரர்கள் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். அந்தக் கடையில் தனக்கு காலனிகளும் வாங்கிக்கொண்டார்.

அப்போது கடை வீதியை சேர்ந்த வணிகர்கள் ஒன்றுதிரண்டு கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

Riot specialists must be defeated through unity says Kamal Haasan

JUST IN திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு..; கமல் வாழ்த்து

JUST IN திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு..; கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

மநீம தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசனும் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதில்…

“உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

என கமல் தெரிவித்துள்ளார்.

Kamal wishes to Rajini on Dadasaheb Phalke Award

JUST IN இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினி தேர்வு..; தமிழகத்தில் 3வது நபர்!

JUST IN இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினி தேர்வு..; தமிழகத்தில் 3வது நபர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth (2)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கோலிவுட்டில் (தமிழகத்தில்) நடிகர் திலகம் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் சிகரம் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இந்த விருதினைப் பெறும் 3வது நபர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar Rajinikanth to be bestowed with Dada Saheb Phalke award

எலெக்சனுக்கு ஸ்பெஷல் பஸ்..: ஓட்டு போட விரும்பாத மக்கள்.. ரிசர்வேஷன் மோசம்..!

எலெக்சனுக்கு ஸ்பெஷல் பஸ்..: ஓட்டு போட விரும்பாத மக்கள்.. ரிசர்வேஷன் மோசம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

special bus on election day (1)ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் 100% மக்கள் வாக்களிக்க வேண்டும் என அரசும் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு வந்தும் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

அதாவது இதுவரை 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

www.tnstc.in.tnstc செயலி மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Special buses arranged on election day in TN

தேர்தல் பிரச்சார கடைசி் நாளில் பிரச்சாரம் 2 மணி நேரம் நீட்டிப்புக்கு அனுமதி.; ஏன் தெரியுமா?

தேர்தல் பிரச்சார கடைசி் நாளில் பிரச்சாரம் 2 மணி நேரம் நீட்டிப்புக்கு அனுமதி.; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

election commission of india (2)ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கு முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனை கணக்கில் கொண்டு தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என தமிழக தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேலும் திண்டுக்கல் லியோனியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கூறினார்.

இத்துடன் திமுக எம்.பி.தயாநிதி மாறனின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Election commission extends timing for campaign on last day

More Articles
Follows