முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி கோவையில் மே மாதம் மாநாடு

முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி கோவையில் மே மாதம் மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth stillsதமிழக முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி பிரமாண்ட மாநாடு…

கோவையில் மே மாதம் நடத்துகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்!

‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்துகிறார்.

கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.

இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள், காந்திய மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

மிகப் பெரிய வெற்றி மாநாடாக அது அமைந்தது. தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனை மாநாடு என அந்த மாநாட்டை அரசியல் நோக்கர்கள் குறிப்பிடும் அளவுக்கு பெரும் வெற்றி மாநாடாக மாறியது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார்.

இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு பிரமாண்ட மாநாட்டை ரஜினிக்காக நடத்த காந்திய இயக்கத்தின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் தலைவர் தமிழருவி மணியன்.

இந்த மாநாட்டுக்கு ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிடுகிறார் தமிழருவி மணியன்.

இந்த மாநாட்டில் காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாநாடு குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு

காந்திய மக்கள் இயக்கம்

கமல் படத்தில் அறிமுகமான பாடகருக்கு ரஜினி படத்தில் வாய்ப்பு

கமல் படத்தில் அறிமுகமான பாடகருக்கு ரஜினி படத்தில் வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala movie posterரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், சுகன்யா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனம்

இப்படத்தை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறது.

இந்நிலையில் விஜய் பிரகாஷ் என்ற பாடகர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

இவர் கமல் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூ வாசம் புறப்படும் கண்ணே’ என்ற பாடலின் மூலம் தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘ஓம் சிவோஹம்’ (நான் கடவுள்), ‘காதல் அணுக்கள்’ (எந்திரன்), ‘இன்னும் கொஞ்ச நேரம்’ (மரியான்), ‘ஓடே ஓடே’ (ராஜா ராணி) உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

காலா படப்பெயரில் வேற நடிகரின் பட போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

காலா படப்பெயரில் வேற நடிகரின் பட போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaalaரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படம் போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு பின் இந்த படம் வரவிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் இதே காலா என்ற பெயரில் மற்றொரு நடிகரின் பட போஸ்டரும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜேஎஸ். மணிமாறன் என்பவர் இயக்கி தயாரித்துள்ள இப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சூர்யா உடன் கைகோர்க்கும் ஜிவி பிரகாஷ்

சூர்யா உடன் கைகோர்க்கும் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and gv prakashவிக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக சென்னையில் ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அம்பாசமுத்திரம் போல செட் போடப்பட்டுள்ளது.

இந்த படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா என்பதை பார்த்தோம்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறாராம்.

BREAKING : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

BREAKING : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DWtl0fxVAAAY0XLBREAKING : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை இயக்கும் இளம் இயக்குநர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள
காலா படம் ஏப்ரல் 27ல் வெளியாகிறது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கியுள்ள ரஜினியின் 2.0 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இந்தப் படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என கூறப்பட்டது.

ஏனென்றால் ரஜினி தன் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப் பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

இப்படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்தகவலை சன் டிவி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் ஒரு இந்து துரோகி; அவரை வாழ்த்துகிறேன்.. எச். ராஜா

கமல்ஹாசன் ஒரு இந்து துரோகி; அவரை வாழ்த்துகிறேன்.. எச். ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

H Raja and Kamal haasanநடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பிப்ரவரி 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.

தன் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டு 6 கைகள் இணைந்த கட்சி கொடியை சின்னத்துடன் அறிமுகப்படுத்தினார்.

கட்சி தொடங்கும் அன்று ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார்.

அதன்பின்னர் அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார்.

பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

அன்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதுதான் தன் கட்சியை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிடமும் கமலின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “ .ராமேஸ்வரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர் தான் கமல்.

அப்துல்கலாம் வீட்டுக்குச் சென்றவருக்கு, அங்கு இருக்கும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லக்கூட நேரமில்லை.

ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை கூட வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி.

இருந்த போதிலும் புதியதாக கட்சித் துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows