தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலேவின் அழைப்பின் பேரில் நடிகர் ரஜினிகாந்த், முதல் ஒருநாள் போட்டியைப் பார்க்க ஒப்புக்கொண்டார்.
ரஜினிகாந்த் மார்ச் 17 இன்று தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் ஒருநாள் போட்டியைக் காண மும்பை வந்தடைந்தார். ரஜினிகாந்தை எம்.சி.எஸ் தலைவர் வரவேற்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.எஸ் தலைவர், ரஜினிகாந்தை அழைத்ததாகவும், சூப்பர் ஸ்டார் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.
மேலும், ரஜினிகாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை மும்பையில் நேரடியாகப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth watches the India vs Australia ODI in Mumbai Wankhede stadium.