தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தன் உடல்நிலையை காரணம் காட்டியும் தன்னை நம்பியவர்களை கொரோனாவுக்கு பலிகடா ஆக்க மாட்டேன் என கூறி அரசியலுக்கு முழுக்கு போட்டார் ரஜினிகாந்த்.
இந்த அறிவிப்புக்கு பிறகு 6 மாதங்களை கடந்துவிட்ட நிலையில் (சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சியும் அமைந்துவிட்டது) இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்து பேசுகிறார்
அதன்படி இன்று தன் வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது..
“மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன்” என்றார் ரஜினிகாந்த்.
Rajinikanth says will reconsider entering politics






