தமிழருவி மணியன் அர்ஜுனமூர்த்தி சுதாகர் ஆகியோருக்கு போஸ்டர்களில் இடமில்லை..; ரஜினி உத்தரவு

தமிழருவி மணியன் அர்ஜுனமூர்த்தி சுதாகர் ஆகியோருக்கு போஸ்டர்களில் இடமில்லை..; ரஜினி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்.

இந்த கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்…

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rajinikanth says no to photos of Party coordinator and supervisor

சன் ரைசர்ஸ் பாணியில் ‘அண்ணாத்த’ ரஜினிக்கு பயோ பபுளை உருவாக்கும் சன் நிறுவனம்

சன் ரைசர்ஸ் பாணியில் ‘அண்ணாத்த’ ரஜினிக்கு பயோ பபுளை உருவாக்கும் சன் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annaattheதனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளார் ரஜினி.

அதே போல ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

செட் போடப்பட்டு இன்டோர் சூட்டிங் நடத்தவுள்ளனர்.

கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதால் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாம்.

அதாவது… ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கியிருந்தனர்.

முழுப்படப்பிடிப்பு முடியும் வரை எவரும் வெளியே செல்லக்கூடாதாம். சென்றால் உள்ளே வரக்கூடாதாம்.

இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.

Rajinikanth and his team to shoot in bio bubble

வனிதா பாணியில் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீ கொடுக்கும் ஷனம்.?

வனிதா பாணியில் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீ கொடுக்கும் ஷனம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை 65 நாட்களை கடந்துவிட்டது.

அக்டோபர் 4-ம் தேதி 16 பேருடன் இந்த சீசன் தொடங்கியது.

ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நடிகை விஜே அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் வந்தனர்.

இந்த வார நாமினேஷனில், சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார்.

ஷனம் ஷெட்டியை ஒரு முறை கமல்ஹாசனும் பிக்பாஸ் மேடையில் பாராட்டினார்.

எனவே சனம் வெளியேறிய போது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்தநிலையில் சனம் அவரின் வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சனம் ஷெட்டி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sanam Shetty To Re-Enter Bigg Boss Tamil 4 house As Wild-Card Contestant?

‘அவள் அப்படித்தான்’… சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் பிரபல தொகுப்பாளினி

‘அவள் அப்படித்தான்’… சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் பிரபல தொகுப்பாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1979ல் ‘வண்டிச்சக்கரம்’ பட மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சில்க் ஸ்மிதா.

கமல் & ரஜினி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்தவர்.

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போதே அது மிகப்பெரிய சர்ச்சையானது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை வித்யா பாலனை வைத்து ‘தி டர்ட்டி பிக்சர்’ என்கிற பெயரில் ஹிந்தியில் உருவாக்கினர். அந்த படமும் நன்றாக பேசப்பட்டது.

ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தவறாக காண்பித்தனர் என்று விமர்சனம் எழுந்தது.

ஆனாலும் வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது.

பின்னர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க நடிகர் வினு சக்ரவர்த்தி முயற்சித்தார்.

ஆனால் அது பேச்சோடு நின்றது. நடக்கவில்லை.

இந்நிலையில் சில்க் வாழ்க்கை படம் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட புகழ் மணிகண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினியும் தெலுங்கு நடிகையுமான அனசுயா பரத்வாஜ் தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் அனசுயா.

காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அண்மையில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் புதிய தொடக்கம்.. கோலிவுட் என கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Anasuya Bharadwaj to play the lead role in Silk Smitha’s Telugu biopic

anasuya bharadwaj latest photos

முகத்தில் ரத்த காயங்கள்.. 2 மாதம் முன்பே ரகசிய திருமணம்..; சித்ரா தற்கொலை சீக்ரெட்ஸ்..

முகத்தில் ரத்த காயங்கள்.. 2 மாதம் முன்பே ரகசிய திருமணம்..; சித்ரா தற்கொலை சீக்ரெட்ஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Chitraபாண்டியன் ஸ்டோர் டிவி சீரியல் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சித்ரா.

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாகவும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் இன்று அதிகாலை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துக் கொண்டார். அப்போது அவருக்கு நிச்சயிக்கப்பட்ட கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.

சித்து மறைவுக்கு அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும், ரசிகர் ரசிகைகளும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது.. இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும் ஹேமந்த்க்கும் ரிஜிஸ்டர் திருமணம் நடைபெற்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா புகைப்பட ஆல்பம்

2021 பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருந்தார்.

என் மகள் சித்ரா முகத்தில் காயம் இருந்தது.

அவர் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

யார் மீதும் சந்தேகம் இல்லை. போலீஸ்தான் அதை விசாரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

நாளை சித்ராவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

The reason behind serial actress Chitra suicide

அரசியலில் கமல் & ரஜினி..; சிம்மக்குரலோன் சிவாஜியோடு ஒப்பீட கூடாது..; நாசர் வேதனை

அரசியலில் கமல் & ரஜினி..; சிம்மக்குரலோன் சிவாஜியோடு ஒப்பீட கூடாது..; நாசர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor nasserதென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

“சிவாஜி ஐயா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வரம்.

பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும் திரை நடிப்பு கலையில் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர்.

அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழ்த்திரை அப்படியொரு கம்பீரமான குரல் கேட்டதில்லை.

சிம்மக்குரல் என்பது சும்மா கொடுத்த பட்டமன்று.

சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும் நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தல் காலம் இது. நெருங்கி வருகின்ற இவ்வேளையில் , திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றன.

சிவாஜி ஐயாவின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெரும்தலைவர்களோடு பழகியும்.. புரிந்தும் வந்தவர் .

அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார்.

இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் சார்பாய் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் கூறினார் .

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடந்த தீ விபத்தைப்பற்றி அவரிடம் கேட்ட போது…

“அது விபத்து தான் என்றும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதென்றும் .. உரிய நேரத்தில் கடமையாற்றிய தீயணைப்பு துறைக்கும் அரசு பொறுப்பு அதிகாரிக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் நாசர் .

Actor Nasser requests netizens not to compare Rajini and Kamal politics to Sivaji

More Articles
Follows