தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய அரசியலின் மூத்த தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும் , மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தன் பட சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பி காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
ஆனால் கருணாநிதி நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவரை பார்க்கவில்லை.
பின்னர் கருணாநிதி குடும்பத்தினரிடம் அவருடைய உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்…
“இந்திய அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியின் நலனை விசாரிக்க வந்தேன். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கு இருந்தனர்.
அவர்களுக்கு நான் ஆறுதல் மட்டுமே சொன்னேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கலைஞர் தூங்கிக் கொண்டிருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.
Rajinikanth met Karunanidhi and his family and Kauvery Hospital at Chennai